tamilnadu

img

முன்னாள் அமைச்சர்கள் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல்

அதிமுக முன்னாள் உயர் கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு போலீசார் குற்ற பத்திரிகை தாக்கல்‌ செய்துள்ளனர்.

 வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததன் பேரில் கே.பி.அன்பழகன் மீது 6000 பக்கங்கள் மற்றும் விஜயபாஸ்கர் மீது 216 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கை தாக்கல்கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன் மீது வருமானத்திற்கும் அதிகமாகச் சொத்து குவித்ததாகக் குற்றச்சாட்டு வந்த நிலையில். கடந்த 2022 ஆம் ஆண்டில்,அவருக்குச் சொந்தமான தமிழ்நாடு,ஆந்திரா, உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் அதேபோல் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான 58 இடங்களில் ஊழல் தடுப்பு காவல்துறை நடத்தினர்.அதே ஆட்சிக் காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் மீது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்தல் மற்றும் மருத்துவக் கல்லூரி அமைக்க முறைகேடாக சான்றிதழ் வழங்கிய  வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.