tamilnadu

img

நடத்தாத தேர்வுக்கு கட்டணம்: அண்ணா பல்கலை. மீது புகார்

சென்னை:
நடத்தாத தேர்வுக்கு தேர்வு கட்டணத்தை செலுத்துமாறு அனைத்து கல்லூரிகளுக்கும் அண்ணா பல்கலைக் கழகம் உத்தரவிட்டிருப்பதாக, தனியார் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக கல்லூரியின் இறுதி ஆண்டு தேர்வு தவிர மற்ற தேர்வுகளையும், செமஸ்டர் தேர்வுகளையும் தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இந்த நிலையில் இறுதி ஆண்டு தேர்வை ஆன்லைனில் நடத்த அண்ணா பல்கலைகழகம் டெண்டர் கோரியுள்ளது.இந்நிலையில் நடத்தாத தேர்வுகளுக்கு மாணவர்களிடம் கட்டணம் வசூலித்து, வருகிற 7ம் தேதிக்குள் செலுத்துமாறு பல்கலைக் கழகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு தனியார் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே வசூலித்த கட்டணத்தை வரும் ஆண்டு தேர்வு கட்டணமாக வைத்துக்கொள்ள ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

;