tamilnadu

பிஎஸ்என்எல் 4ஜி சேவையை காலவரையின்றி தாமதப்படுத்துவதா?

சென்னை, ஜன. 19 - தனியார் தொலைத்தொடர்பு நிறு வனங்கள் 4ஜி சேவைகள் வழங்கத் துவங்கி  10 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் 2ஜி, 3ஜி சேவைகள் மட்டும் வழங்கும் நிலைக்கு அரசால் தள்ளப்பட்டுள்ளது. அனைவரும் அதிவேக இணைய சேவை நோக்கி நகரும் சூழலில், பி.எஸ்.என்.எல். தனது வாடிக்கையாளர்களை இழந்து நிற்கிறது. ஒன்றிய பாஜக அர சின் தனியார், கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளே பி.எஸ்.என்.எல் நிறு வனத்தின் இந்த நிலைக்கு முக்கிய காரண மாக அமைந்துள்ளது.

பி.எஸ்.என்.எல். சந்தித்து வரும் சவால்களையும், 4ஜி சேவைகள் வழங்க  தேவையான கருவிகளை உற்பத்தி செய்து வழங்குவதில் டி.சி.எஸ். நிறுவனம் காட்டி வரும் காலதாமதத்தையும் சுட்டிக்காட்டி, பி.எஸ்.என்.எல். ஊழியர்  சங்கத்தின் அகில இந்திய பொதுச்செய லாளர் பி. அபிமன்யு ஒன்றிய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் பி. அபிமன்யு கூறியிருப்பதாவது: பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த 2014 முதல் பொதுத்துறைகளை சீர்குலைக் கும் நடவடிக்கைகளை அதிவேகமாக அமல்படுத்தி வருகிறது. தொலைத் தொடர்பு துறையில் மிக முக்கியப் பங்கு  வகித்து வரும் பி.எஸ்.என்.எல். நிறு வனமும் இந்த கொள்கைகளால் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.

கட்டாய விருப்ப ஓய்வு, அவுட் சோர்சிங் போன்ற நடவடிக்கைகளால் சேவை களும் பாதிக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில் ‘டிராய்’ அமைப்பு வெளி யிட்டுள்ள அறிக்கையில், மாதந்தோறும் பி.எஸ்.என்.எல் பயன்படுத்தும் வாடிக்கையாளரிகளின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் குறைவது தெரிய வந்துள்ளது. கடந்த 2023 ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 22 லட்சத்து 20 ஆயிரத்து 654 வாடிக்கையாளர்களையும் செப்டம்பர் 2023-இல் 23 லட்சத்து 26 ஆயிரத்து 751 வாடிக்கையாளர்களையும் பி.எஸ்.என்.எல். இழந்துள்ளது. அதே நேரத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் நிறு வனங்களின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

 பி.எஸ்.என்.எல். சந்திக்கும் இந்த சவாலுக்கு முக்கியமான காரணம் இதர தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் 4ஜி, 5ஜி சேவைகளை வழங்கத் துவங்கி விட்ட போதிலும், தங்களால் நிறுவனத்தால் 4ஜி சேவையை கூட வழங்க  முடியவில்லை என்பதும், அரசின் கொள்கை கள் சாதகமாக இல்லை என்பதுமே ஆகும்.  இந்தியாவில் மிகப்பெரிய தனியார் நிறுவனமான டி.சி.எஸ்., 4ஜி சேவைகள் வழங்கும் கருவிகளை உற்பத்தி செய்து பி.எஸ்.என்.எல்-க்கு வழங்க ரூ 15,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை 2023  மே மாதம் பெற்றது.

அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இந்த நிறுவனம் 4ஜி சேவைகள் வழங்கும் உரிமையை பெற்றிருந்தது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தான உடன் தொலைத்தொட ர்புத்துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ், அதாவது 2023 மே 24 அன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இன்னும் இரண்டு வாரங்களில் 4ஜி சேவையும், 2023 டிசம்பரில் 5ஜி சேவை யும் பி.எஸ்.என்.எல். வழங்கும் என தெரிவித்தார். இதற்காக 4 லட்சம் 4ஜி சேவை வழங்கும் சர்வீஸ் பாயிண்ட்கள் அமைக்கப்படுவதாகவும் அறிவித்தார்.  தொடர்ந்து, 2023 அக்டோபர் மாதத்தில் டி.சி.எஸ். நிறுவனத்தின் கரு விகள் பொருத்தப்பட்டு சேவைகள் துவங்கப்படும் என பி.எஸ்.என்.எல் தலை வர் மற்றும் நிர்வாக இயக்குநர் தெரி வித்தார்.

இதற்கும் மேலாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்க்கு 4ஜி வழங்கும் உரிமத்தை ஒன்றிய அரசு 2019 அக்டோபர் 23 அன்று கேபினட் கூட்டத்தில் அளித்தது. மற்ற நிறுவனங்கள் 5ஜி சேவைகள் வழங்க தயாராகிவிட்ட சூழலில்  பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் இதனை தாமதமான நடவடிக்கை என விமர்சனம் செய்தது. ஆனால், கடந்த 8 மாதங்களாக டி.சி.எஸ் நிறுவனம் கருவிகள் வழங்கு வதிலும், 4ஜி சேவைகளை சோதனை அடிப்படையில் அமலாக்குவதிலும் காலம் தாழ்த்தி வருவதாக அமைச்ச ருக்கு எழுதிய கடிதத்தில் அபிமன்யு தெரிவித்துள்ளார். முழுமையான சோதனைகளை டி.சி.எஸ். நிறுவனம் எப்போது செய்து முடிக்கும் என்பதிலும் எந்தத் தெளியும் இல்லாத நிலை தொடர்கிறது.  சர்வதேச நிறுவனங்களின் 4ஜி சேவைக் கருவிகள் சந்தையில் எளிதாக கிடைக்கும் நிலையிலும், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் அடிப்படையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யும் கருவிகளைத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற வழிகாட்டல் பி.எஸ்.என்.எல்-க்கு மேலும் சிக்கல்களை உருவாக்கியுள்ளது.  

பா.ஜ.க அரசின் கொள்கைகளால் ஊழியர்களும் பெரும் சிக்கல்களை சந்திக் கின்றனர். ஜனவரி 1- 2017 அன்று வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு,  பி.எஸ்.என்.எல். நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நஷ்ட த்திற்கான காரணம் ஆளும் அரசுதானே தவிர ஊழியரகள் அல்ல. சுமார் 80 ஆயிரம் நிரந்தர ஊழியர்களுக்கு கட்டாய ஒய்வு அளித்தால் நிறுவனம் லாபம் ஈட்டும் என்ற வாதமும் தற்பொது பொய்யாகிவிட்டது.

 பி.எஸ்.என்.எல். நிறுவனமும், ஊழியர்களும் சந்திக்கும் சவால்களை மேலும் வலிமையாக அரசிடம் எடுத்துச் செல்ல, விவசாய சங்கங்களின் கூட்ட மைப்பு பிப்ரவரி 16 அன்று துறைவாரி யான வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது, அதில் கலந்து கொள்வதாக பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.  பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மட்டு மல்லாமல், இட ஒதுக்கீடு அடிப்படை யில் உரியவர்களுக்கு சமூக பாதுகாப்பு டனான வேலைவாய்ப்பையும் உறுதி செய்யும். இந்த உரிமைகளை வெல்லவும்,  பொதுத்துறையான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை பாதுகாக்கவும் பொதுக் கருத்தை உருவாக்குவது அவசியம். இவ்வாறு பி. அபிமன்யு தனது கடிதத்தில் குறிப்பிடத்தக்கது.