tamilnadu

img

‘பாசிச பாஜக ஆட்சியை சுட்டெரிக்கவே தீப்பெட்டி சின்னம்’

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ போட்டியிடுகிறார். மதிமுகவிற்கு தீப்பெட்டி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. 

தீப்பெட்டி சின்னத்தை அறிமுகப்படுத்தி, வேட்பாளர் துரை.வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரை தொகுதி முழுவதும் நாங்கள் செல்லும் இடங்களில் மக்கள் முக மலர்ச்சியோடு உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். இந்தி யாவை இருளில் தள்ளிய 10 ஆண்டுகால பாசிச பாஜக ஆட்சியை அகற்றி, விடியலைத் தரப்போகும் திமுக கூட்டணிக் கட்சிக்கு தீப்பெட்டிச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சின்ன மாக இருப்பதால், எல்லோரிடமும் எளிதில் போய்ச் சேரும் சின்னம் இது. 

தேர்தல் விதிமுறை, கட்டுப்பாடு எதிர்க்கட்சிகளுக்கு மட்டும் தான் போலிருக்கிறது. தேர்தல் நெருங்கும் போது, பாஜகவி னர் எல்லா விதமான அக்கிரமங்கள், அத்துமீறல்களையும் செய்வார்கள். அண்ணாமலை அனைத்து தலைவர்களை யும், அடையாளங்களை கொச்சைப்படுத்தி வருகிறார். பாஜக வின் வீழ்ச்சிக்கு, அவர் தான் ஒரு காரணமாக இருக்கப் போகிறார்.

இவ்வாறு துரை வைகோ கூறியுள்ளார்.

இதனையடுத்து ஞாயிறன்று திருச்சி நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பணிமனையை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி முன்னிலை வகித்தார்.

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு மார்சிங்பேட்டை, ஒத்தக்கடை, பெரிய மிளகுபாறை, காமராஜபுரம் பொன்னகர், கருமண்டபம் பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில், திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் துரை.வைகோ வை ஆதரித்து, தீப்பெட்டி சின்னத்தில் வாக்குக் கேட்டு பொது மக்களிடையே உரையாற்றினார்.

இதில் இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.