கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு வட்டியுடன் பணம் வழங்க வேண்டும் ஆட்சியருக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
காஞ்சிபுரம், ஜூன் 13- தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்ட மைப்பு மூலம் நெல் கொள்முதல் செய்த விவசாயிகளுக்கு பணம் வழங்க வலி யுறுத்தி வெள்ளியன்று (ஜூன் 13) காஞ்சி புரம் ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன்கேட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய கூட்டு றவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் 134 இடங்களில் கொள்முதல் நிலை யம் அமைக்கபட்டு 34 கிராம விவசாயிகளிட மிருந்து நெல் கொள்முதல் செய்த 36 கோடி ரூபாயை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும். மேலும், 1243 விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய பணத்திற்கு மூன்று மாதத்திற்கு வட்டியுடன் வழங்க வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு பணம் கிடைக்க காஞ்சி புரம் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி சங்கத்தின் மாவட்டக்குழு சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் என்.நந்தகோபால் தலைமையில், சங்கத்தின் மாநில துணை செயலாளர் கே.நேரு சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் என்.சாரங்கன், மாவட்டப் பொருளாளர் எஸ்.செல்வம், மத்திய மாநில பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்க ளின் கூட்டமைப்பு நிர்வாகி ஒய்.சீதாரான் மற்றும் எல்.முருகேசன், வி.பாஸ்கர், ஜி.திருநாவுக்கரசு, டி.வி.லட்சுமணன், பாஸ்கர், இ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினர்.