சென்னை, மார்ச் 6- சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அப்பட்டமாக பொய் பேசி விட்டு சென்றுள்ளார் என முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் தெரிவித்துள்ளார்.
மாநில அரசுக்கு நிதி ஒதுக்கா மல், நேரடியாக மக்களுக்கு நிதி அளித்துள்ளதாக கூறிய பிரதமர் நரேந்திர மோடி, எந்த மக்களுக்கு கொடுத்தார் என சொன்னால் அவர்களிடம் கேட்கலாம் என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரிகள் மக்களிடம் பேசும் ‘நீங்கள் நலமா’ திட்டம்
சில தினங்களுக்கு முன்பு, மயி லாடுதுறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், “அரசின் நலத் திட்டங்கள் மக்களைச் சென்றடை வதை உறுதி செய்யும் வகையில் ‘நீங்கள் நலமா?’ என்ற திட்டம் மார்ச் 6 அன்று தொடங்கப்படும்” என அறிவித்தார்.
இந்த திட்டத்தின் மூலம், முதல் வர் துவங்கி அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் போன்ற அனைத்து அரசு அதிகாரி களும் தமிழ்நாடு மக்களை செல் போனில் தொடர்பு கொண்டு மக்க ளின் குறைகள் குறித்து கேட்டறிய உள்ளனர். அந்த கருத்துகளின் அடிப்படையில், திட்டங்கள் மேலும் செம்மைப்படுத்தப்படும் என்றும் அப்போது கூறினார்.
குடும்பங்களைக் கைதூக்கி விடும் ஆட்சி
அதன்படி ‘நீங்கள் நலமா‘ திட் டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் புதனன்று (மார்ச் 6) தொடங்கி வைத் தார். தனலட்சுமி என்ற பெண்ணிடம் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.
அதன்படி ‘நீங்கள் நலமா‘ திட் டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் புதனன்று (மார்ச் 6) தொடங்கி வைத் தார். தனலட்சுமி என்ற பெண்ணிடம் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து பேசிய முதல்வர், “ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை யால் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதி உதவிகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருவதை நான் அதிகம் விளக்கத் தேவையில்லை. சில நாட்களுக்கு முன்னால் சென் னைக்கு வந்து பேசிய பிரதமர் மோடி அவர்கள், மாநில அரசுக்குத் தராமல் மக்களுக்கு நேரடியாக நிதி வழங்கி வருவதாக அப்பட்டமான ஒரு பொய்யைச் சொல்லி விட்டுச் சென்றுள்ளார்.
37 ஆயிரம் கோடி இல்லை; 1 ரூபாயாவது கொடுத்தாரா?
எந்த மக்களுக்குக் கொடுத்தார் என்பதைச் சொல்லி இருந்தால், அந்த மக்களுக்குக் கிடைத்ததா, என்று கேட்கலாம். இரண்டு மாபெ ரும் இயற்கை பேரிடரை 8 மாவட்ட மக்கள் சந்தித்தனர். இதற்காக 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கேட் டோம். அதற்கு 1 ரூபாயாவது ஒதுக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு உதவி செய்தாரா பிரதமர்? இப்ப டியா பொய்களைச் சொல்வது?
ஒன்றிய அரசிடம் இருந்து நிதி வரவில்லை என்றாலும் இந்த 8 மாவட்டங்களுக்கு மக்களுக்காக, மாநிலப் பேரிடர் நிதி மற்றும் அர சுத் துறைகளில் இருந்து 3,406.77 கோடி ரூபாய் அளவுக்கு நிதி வழங்கியும், நிவாரணப் பணி களைச் செய்தும் மக்கள் நலம் காத்து வரும் அரசு தான் இந்த அரசு. ஒதுக்கப்படும் நிதி ஒவ் வொரு குடிமகனையும் சென்று சேர வேண்டும்; நலத்திட்டம் ஒரு ரூபாய் என்றாலும் அது உங்களிடம் வந்து சேர வேண்டும் என்று நினைத்து திட்டங்களைத் தீட்டுபவன் நான்” என்று குறிப்பிட்டார்.