சென்னை, ஜூலை 10- தமிழகத்துக்காக போராடி பெற்ற மருத்துவ இடங்களில் வெளி மாநில மாணவர் யாருக்கும் மருத்துவ இடம் வழங்கப்படாது என்றும், போலிச் சான்றிதழ் சமர்பிக்கும் மாணவர்கள் மீது குற்றவியல் வழக்கு பாயும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார். சட்டப்பேரவையில் புதனன்று (ஜூலை 10) நேரமில்லா நேரத் தில் பேசிய திமுக உறுப்பினர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன், “அண்மையில் வெளி யிடப்பட்ட மருத்துவ தரவரிசை பட்டியலில் இரட்டை இருப்பிட சான்றிதழ் பெற்ற வெளிமாநில மாணவர்கள் பெயர் இடம் பெற்றுள்ளதாகவும், அவர்க ளுக்கு மருத்துவ இடங்கள் ஒதுக்க கூடாது என்றும் வலியுறுத்தி, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “மருத்துவப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விண்ணப்பங்களை மருத்துவ துறை அதிகாரிகள் கூர்ந்து கவனித்து ஆய்வு செய்துள்ள னர். இதுவரை பெறப்பட்ட 39 ஆயிரத்து 13 விண்ணப்பங்க ளில் தீவிர கண்காணிப்புகளுக்கு பிறகு 3 ஆயிரத்து 516 விண் ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள் ளது” என்றார். தமிழகத்துக்காக போராடி பெற்ற மருத்துவ இடங்களில் வெளி மாநில மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்ப தில் அரசு உறுதியாக இருப்பதாக வும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். இதற்காக தனியாக குழு அமைத்து, விண்ணப்பிக்கும் மாணவர்களின் பிறப்புச் சான்றி தழ், மாணவரது பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ், மாணவரின் பெற்றோர் தமிழ்நாட்டில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ், மாணவர் மற்றும் பெற்றோரின் சாதி சான்றிதழ், குடும்ப அட்டை உள்ளிட்ட விவரங்கள் பெறப் பட்டு சரிபார்க்கப்படுகிறது.இவற்றோடு சேர்த்து, மாணவர் மற்றும் பெற்றோரிடத்தில் ‘பிர மாண பத்திரம்’ ஒன்றில் கையெ ழுத்து பெறப்படுகிறது. அந்த பிரமாண பத்திரத்தில், மாணவ ரின் விண்ணப்பத்தில் தெரி விக்கப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் சமர்பிக்கப்பட்டுள்ள சான்றிதழ்கள் அனைத்தும் உண்மையானவை, அதில் ஏதாவது தவறு இருந்தால் மாண வரை தகுதி நீக்கம் செய்யலாம், கிரிமினல் வழக்கு தொடுக்கலாம் அதற்கு சம்மதிக்கிறேன் என பெற் றோரும், மாணவரும் உறுதி கூறும் வாசகம் இடம் பெற்றுள்ள தாகவும் அமைச்சர் விஜய பாஸ்கர் கூறினார்.