tamilnadu

img

ஆறுமுகசாமி ஆணையம் 8-வது முறையாக நீட்டிப்பு

சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 4 மாதம் அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து தமிழக அரசு கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி உத்தரவிட்டது.

தொடர்ந்து சசிகலா, சசிகலா உறவினர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், பணியாளர்கள் என 150-க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது.இதற்கிடையே மேலும் 4 மாதம் அவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடந்த திங்கட்கிழமை அன்று கடிதம் எழுதியிருந்தது.இந்நிலையில், ஜூன் 24 ஆம் தேதியோடு முடிவடைந்த ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 4 மாதம் தமிழக அரசு அவகாசம் வழங்கியுள்ளது.  ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 8வது முறையாக அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

;