“இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஜவஹர்லால் நேரு உட்பட அனைவரும் பாடுபட்டார்கள். ஆனால், பாஜகவிற்கும் சுதந்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சர்தார் படேல் மற்றும் காமராஜர் ஆகியோர் பற்றிப் பேச இவர்களுக்கு உரிமை இல்லை. பாஜகவின் ஒரே குறிக்கோள் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவதாக உள்ளது. இவர்களுக்கு உறுதுணையாக இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவும் வெற்றி பெறக்கூடாது” என்று மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.