‘‘ஐபிசி, சிஆர்பிசி, ஐ.இ.ஏ ஆகிய குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் இந்தியில் மாற்றப் பட்டாலும் நான் ஐபிசி என்று தான் குறிப்பிடுவேன். ஏனென்றால் எனக்கு இந்தி தெரியாது’’ என உயர்நீதி மன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் குறிப்பிட்டுள் ளார். அவரின் கருத்து சரியானது;
பாராட்டத்தக்கது. குற்றவியல் சட்டங்களின் பெயர்களை மாற்றும் போது ஒன்றிய ஆட்சிக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன.
ஆனாலும் அவற்றின் பெயர்களையும் உள்ளடக்கத்தையும் பிற்போக்காக மாற்றி யமைத்துள்ளது ஒன்றிய பாஜக அரசு. ஒற்றை மொழியை திணித்தால், நடைமுறையில் அது எதிராகவே முடியும் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. தமிழ் வழியில் நீதித்துறை நடவடிக்கைகளை சாத்தியமாக்க மறுத்துவரும் ஒன்றிய அரசு, இந்தித் திணிப்பில் வேகம் காட்டுவது வன்மையான கண்டனத்திற்குரியது.