மீஞ்சூர் ஏரி, வாயலூர், மொரட்டூர், கே.ஆர்.பாளையம் உள்ளிட்டு ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்களையும் தூர்வாரி நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழனன்று (ஜூலை 11) மீஞ்சூர் பஜாரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் என்.ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.துளசிநாராயணன், மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.விநாயகமூர்த்தி, பகுதிக்குழு உறுப்பினர்கள் இ.ஜெயவேல், எம்.கருணா, செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.