சென்னை,ஜூன் 15- மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையில், தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் விசைப்படகுகளுடன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரை ஆழ்கடல் பகுதிகளில் கடந்த ஏப்.15ஆம் தேதி முதல் 61 நாட்கள் மீன்களின் இனப்பெருக்க காலம் என வரையறுக்கப்பட்டு விசைப்படகுகள் உள்ளிட்ட படகுகளுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையில், 2 மாதங்களுக்கு பிறகு புதன்கிழமை (ஜூன் 15) கடலூர், நாகை, தூத்துக்குடி, சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட அனைத்து மீன்பிடி துறைமுகத்திலிருந்து விசைப்படகுகள் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இதனால் மீன்விலை சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.