சென்னை, பிப். 5- முதன்மை கட்டுக்காப் பாளராக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களே தொடர வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கள் கழகம் வலியுறுத்தி யுள்ளது.
இதுகுறித்து மாநில பொதுச்செயலாளர் சா.ஞானசேகரன் பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தேர்வு துறை இயக்கு நர்களுக்கு அனுப்பிள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது:
மேல்நிலை தேர்வு வினாத்தாள் கட்டுக்காப் பாளர் பணிகளை மேல் நிலை கல்வியில் பணி யாற்றிய முதுகலை ஆசி ரியர்களும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் களும் பார்த்து வந்த நிலையில் மேல்நிலைக் கல்விப் பணியை சாராத அல்லது மேல்நிலைக் கல்வியில் பணியாற்றாத இடைநிலை கல்வி அலுவ லர்களை முதன்மை கட்டுக் காப்பாளராகவும், மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை அவருக்கு கீழாக உதவி கட்டு காப்பாள ராகவும் தேர்வுத்துறை தன்னிச்சையாக முடி வெடுத்துள்ளது மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் அதிகா ரத்தை பறிக்கும் செயல்.
மேலும் கடந்த 2017 வரை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உழைப்பூதியமாக ரூ.150 பெற்று வந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டில் 15 விழுக்காடு மற்ற தொகுதிகளுக்கு உழைப் பூதியம் உயர்த்தப்பட்டது. ஆனால் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 15 சதவீதம் குறைக்கப்பட்டு ரூ.133 என்று குறைத்திருப் பதை நினைவு கூற விரும்பு கிறோம்.
மேலும் மாவட்ட கல்வி அலுவலர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின்போது, தேர்வு முறையை ஆய்வு செய்யக்கூடிய அதிகாரி யாக இருப்பதினால், அவர் எவ்வாறு மேல்நிலை தேர்வு பணியில் வினாத்தாள் கட்டுக்காப்பாளராக செயல்பட முடியும்? வினாத்தாள் கட்டுக் காப்பாளராக செயல் பட்டால் பள்ளிகளின் ஆய்வு பணியை எவ்வாறு மேற்கொள்ள முடியும்.
மேல்நிலைக் கல்விப் பணியில் முற்றிலும் அனுப வமற்ற இடைநிலை, மாவட்ட கல்வி அலுவ லர் வினாத்தாள் கட்டுக்காப் பாளராக செயல்பட்டால் வினாத்தாளின் மந்த தன்மை கேள்விக்குள்ளாகும். எனவே அதிக அனுபவம் வாய்ந்த முதுகலை ஆசிரி யர்களையும், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரி யர்களும் மட்டுமே வினாத் தாள் கட்டுக் காப்பாளராக செயல்பட வேண்டும். கடந்த 45 ஆண்டுகளாக இருந்த நடைமுறையை தற்போது மாற்றுவதை கைவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.