சென்னை, மார்ச் 17- கொரோனா வைரஸ் குறித்து ரயில் பயணிகளுக்கு போதிய விழிப்பு ணர்வு இல்லை என்றும் அவர்கள் ரயில் பயணத்தை தவிர்க்க வேண்டும் என தெற்கு ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் கணேஷ் வலியுறுத்தினார். கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், கொரோனா வைரஸ் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாயன்று (மார்ச் 17) நடைபெற்றது. இதில் தெற்கு ரயில்வே உயர திகாரிகளும், மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளும், ரயில்வே காவல் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். பின்னர் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் கணேஷ் செய்தி யாளர்களிடம் கூறுகையில், சென்னை எம்ஜிஆர் ரயில் நிலையம், எழும்பூர், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்கள் மிக தீவிரமாக கண்கா ணிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கர்நாடகா, கேரளா பயணிகள் மட்டு மல்லாது அனைத்து ரயில் பயணிகளையும் மிகக் கவனமாக சோதனை செய்வதற்கு ஏற்ப, ரயில் பயணிகள் 3 வழிகள் வழியே வெளியே வருவ தற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த மூன்று வாயில்களி லும் தலா பத்து நபர்கள் மாற்றுப் பணியில் 24 மணி நேரமும் சோத னையில் ஈடுபடுவார்கள் என்றார். சுகாதாரத் துறை சார்பில் நவீன கருவிகள் வழங்குவதாக உறுத்தி யளித்து உள்ளார்கள். பொதுமக்களுக்கு எவ்வாறு விழிப்புணர்வாக இருக்க வேண்டும் பயணிகள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்ற அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் பயணி களுக்கு வைரஸ் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை என்று கூறிய அவர் அதற்கான தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு, ரயில்வே துறை, காவல்துறை அனைவரும் தயாராக உள்ளனர். பொதுமக்கள் இந்த காலகட்டத்தில் ரயில் பயணத்தை தவிர்க்குமாறும் அவர் வேண்டு கோள் விடுத்தார்.