tamilnadu

img

ஆட்டோ செயலியை உருவாக்குக!

செயலியை தொடங்கி, அரசே செயல்படுத்த வேண்டும் என்று ஓட்டுநர்கள் வலி யுறுத்தினர்.

ஆட்டோக்களுக்கு செய லியை அரசு தொடங்கி நடத்த வேண்டும் என்று அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்ட மைப்பு வலியுறுத்தி வருகிறது. இதனையொட்டி கூடுதல் போக்கு வரத்து துறை ஆணையர் மண்ண க்குமார் தலைமையில் சனிக் கிழமையன்று (அக்.28) சென்னை யில் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.

இந்தக் கூட்டத்தில் போக்கு வரத்து துறை அதிகாரிகள், அனைத்து ஆட்டோ தொழிற் சங்க கூட்டமைப்பினர், ஆட்டோ செயலி தயாரிக்கும் டாக்சினா நிறு வன அதிகாரிகள் கலந்து கொண்ட னர்.

இதன்பின் செய்தியாளர் களிடம் பேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பால சுப்பிரமணியம், “ ஆட்டோ செய லியை அரசு உருவாக்கி, அரசு முத்திரையுடன் நடத்த வேண்டும். அதற்கு முன்பாக மீட்டர் கட்ட ணத்தை குறைந்தபட்சம் 1.5 கி. மீட்டருக்கு ரூ 50, அடுத்த டுத்து ஒவ்வொரு கி.மீட்டருக்கு ரூ 25 என நிர்ணயிக்க வேண்டும். முத்தரப்பு குழுவின் ஆலோசனை யோடு செயலியை தொடங்க வேண்டும்” என கூட்டத்தில் வலி யுறுத்தியதாக கூறினார்.