தமிழ்நாட்டின் உரிமைகளுக் காக நாடாளுமன்றத்தில் கர்ஜிக்கும் எம்.பி.க்களில் முதன்மையானவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன். கொரோனா காலத்தில் உணவு வழங்குவதற்காக ‘அன்னவாசல்’ துவங்கியது முதல் மாணவர் களுக்கு கல்விக் கடன் பெற்றுக் கொடுத்ததில், மாற்றுத் திறனாளி களுக்கான முகாம்களை நடத்தி யதில்- பாஜக ஒன்றிய அமைச்சர் களே தவிர்க்க முடியாமல்- பாரா ட்டும் அளவிற்கு பணியாற்றியிருப்பவர்.
கடந்த 5 ஆண்டுகளில் நாடா ளுமன்ற உறுப்பினர் என்ற வகை யில் அரசிடம் போராடி தீர்வுகண்ட 150 பிரச்சனைகளை தனி புத்தக மாக அண்மையில் வெளியிட்டார். மதுரை ரயில் நிலையம் எதிரே உள்ள அலுவலகத்தில் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எளிதில் சந்தித்து முறையிடக்கூடிய எம்.பி.யாக இருந்து வருபவர்.
இந்நிலையில்தான், சு. வெங்க டேசனைக் காணவில்லை என் றும், ‘கண்டா வரச் சொல்லுங்க’ என்றும் திடீரென மதுரை முழு வதும் அநாமதேய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இது முழுக்க முழுக்க அரசியலுக்காக ஒட்டப் பட்டதுதான் என்றாலும், போஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததைப் பார்த்த வெங்கடேசன் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவில்லை.
தன்னைக் காணவில்லை என்று ஒட்டப்பட்டிருந்த அந்த போஸ்டர் கள் அருகே நின்று புகைப்படம் எடுத்து, அதனை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, ‘காத்திருக்கி றேன்’ என்பதை ஆங்கிலத்தில் ‘ஐ எம் வெயிட்டிங்’ என்று குறிப் பிட்டு, போஸ்டர் ஒட்டியவர்களை ‘கையோடு கூட்டிவாருங்கள்’ என்று ஹேஷ்டேக்கும் பதிவிட் டுள்ளார். இது சமூகவலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.