tamilnadu

img

மக்களவை தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்

சென்னை,பிப்.2- வருகிற மக்களவை தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளது என்று தேர்தல் அதி காரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத் தில் தலைமைச் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- மக்களவைத் தேர்தல் பற்றி ஏற்கெனவே, மாவட்ட தேர்தல் அதிகாரி கள், தேர்தல் நடத்தும் அதிகாரிக ளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் பயிற்சி மற்றும் ஆலோசனைகளை காணொலி வாயிலாக வழங்கியுள்ளது.

அதைத்தொடர்ந்து, தற்போதைய  உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்க ளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகி றது. 250 உதவி தேர்தல் நடத்தும் அலுவ லர்கள், மண்டலம் வாரியாக பிரிக்கப் பட்டுள்ளனர். அவர்களில் மதுரை, திருச்சி, கோவை பகுதிகளைச் சேர்ந்த வர்களுக்கு ஏற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்டு விட்டது. அதைத்தொடர்ந்து, சென்னை மாநகராட்சியில் 2 பிரிவினருக்கு பயிற்சி  அளிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு பிரிவினருக்கு வரும் 5 முதல் 9 ஆம் தேதி வரை பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி பெற்ற அலுவலர்கள், அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள அலுவலர்களுக்கு மாவட்டங்களில் பயிற்சி அளிப்பார்கள். நாடு முழுவதும் உள்ள தேர்தல் தொடர்பான காவல்துறை பொறுப்பு அதிகாரிகளுக்கு தில்லியில் தேர்தல் ஆணையர்கள் சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில் செலவினம் தொடர்பான முக்கியத்துவம் பெற்ற தமிழ்நாடு சார்பில் நானும், சட்டம்-ஒழுங்கு தொடர்பான முக்கியத்துவம் பெற்ற மேற்கு வங்க தலைமை தேர் தல் அதிகாரியும், பல்வேறு மாநிலங்க ளில் இருந்து பங்கேற்கும் ஐ.ஜி அல்லது காவல்துறை கூடுதல் டி.ஜி.பி.  நிலையிலான ஐ.பி.எஸ் அதிகாரி களுக்கு பயிற்சி அளிக்கிறோம். மக்களவைத் தேர்தலுக்கு பயன் படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் முதல் கட்ட சரிபார்த்தல் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதும், அடுத்த கட்டமாக சரிபார்க்கும் பணிகள் நடை பெறும். தேர்தல் பணிகளில் கூடுதல் அதிகாரிகள் தேவைப்படுவது குறித்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம்.  கடந்த ஜனவரியில் வெளியிடப் பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் குறைபாடுகள் இருப்பதாக புகார்கள்  தெரிவிக்கப்படவில்லை. அதுபற்றி  அதிமுக சார்பில் சில பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. இறுதி வாக்கா ளர் பட்டியலின்படி புதிதாக வாக்கா ளர்களாக சேர்க்கப்பட்டவர்கள், முகவரி மாற்றம் போன்றவற்றுக்காக விண்ணப்பித்தவர்கள் என 18 லட்சம்  பேருக்கு புதிய வாக்காளர் அடையாள  அட்டைகள் விரைவில் பதிவு தபாலில் அனுப்பப்படும்

. புதிதாக பெயர் சேர்க்கவும், பெயர்  நீக்கப்பட்டிருந்தால் மீண்டும் சேர்க்க வும் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு,  வேட்புமனு தாக்கலுக்கான இறுதி தேதிக்கு 10 நாட்கள் முன்பு வரை பட்டி யலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க லாம்.

இவ்வாறு அவர் கூறினார்.