tamilnadu

மின்வாரிய ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர் விவகார மனு தள்ளுபடி

சென்னை, ஏப்.22- தமிழ்நாடு மின் வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் 3 உறுப்பினர்கள் இருப்பார்கள். இந்த ஆணையமானது, மின்சார உற்பத்தி, விநியோகம், கொள்முதல் தொடர்பான பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறது.தமிழ்நாடு மின் வாரிய ஒழுங்கு முறைஆணைய உறுப்பினர் ஒருவர் ஓய்வுபெற்ற நிலையில்,புதிய உறுப்பினரைதேர்வு செய்வது தொடர்பாக மின்வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, அரசின் நியமனத்திற்கு தடை விதித்தது.இதை எதிர்த்து, தமிழ்நாடு அரசின் சார்பில் தாக்கல்செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை, திங்களன்று(ஏப்.22) விசாரித்த உச்சநீதிமன்றம், தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.  

;