ஆவடி அருகே புறநகர் மின்சார ரயில் ரயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
சென்னை, ஆவடி ரயில்நிலையம் அருகே இன்று காலை 5.40 மணிக்கு புறநகர் மின்சார ரயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
பயணிகள் பத்திரமாக இறக்கிவிடப்பட்டதால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
அவ்வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டுனர்.
ரயில்வே ஊழியர்கள் 500 பேர் மூலம் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட ரயில் பெட்டிகளைச் சீர் செய்யும் பணி நடந்து வருகின்றது.
சென்னை நோக்கி வரும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், புறநகர் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதால், வந்தே பாரத், சதாப்தி உள்ளிட்ட விரைவு ரயில்கள் சென்னையிலிருந்து புறப்படுவதிலும் சிக்கல் ஏற்பட்டது.
இதனால், சதாப்தி, பிருந்தாவன், இரண்டடுக்கு விரைவு ரயில் உள்ளிட்டவற்றின் புறப்பாட்டு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
புறநகர் மின்சார ரயில்கள் சில விரைவு ரயில் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.