tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

‘வெள்ளி, திங்கட்கிழமைகளில் தேர்தல் வைக்கக் கூடாது!’
சென்னை, ஏப்.20- தமிழகத்தில் நடைபெற்ற மக்க ளவைத் தேர்தலில் வாக்குப்பதிவு சத விகிதம் கடந்த  தேர்தல்களை விட குறைத்திருப்பது பல்வேறு கேள்வி களை எழுப்பியுள்ளது. இதற்கான கார ணங்கள் குறித்து பலரும் அலசி ஆரா ய்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை யன்று தேர்தல் நடத்தியதே வாக்குப் பதிவு குறைந்ததற்கு காரணம் என்று  பாஜக தலைவர்களில் ஒருவரான தமி ழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். “வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் தேர்தல் நடத்தினால் பிந்தைய மற்றும்  முந்தைய நாட்களில் தொடர் விடுப்பு  எடுத்துக் கொண்டு மக்கள் வாக்களிக்க  வருவதில்லை” என்று குறிப்பிட்டிருக் கும் அவர், “இதனால், தேர்தலை புதன்,  வியாழன் போன்ற நாட்களில் நடத்த  வேண்டும்” என வலியுறுத்தி இருக்கி றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

த.வெ.க. தலைவர் விஜய் மீது புகார்
சென்னை, ஏப்.20- தமிழக வெற்றிக் கழகத் தின் தலைவர் விஜய் ஏப்ரல் 19  அன்று நண்பக லில் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்கச் சென்றார். அப்போது அங்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில், விஜய்  மீது சென்னை காவல் ஆணையர் அலு வலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில்,  200க்கும் மேற்பட்ட நபர்களுடன், தேர்  தல் விதிமுறைகளை மீறி வாக்குச்சாவ டிக்குள் சென்றதாக குற்றம் சாட்டப் பட்டுள்ளது.

வாக்குப் பதிவின் போது உயிரிழந்தோர்க்கு இழப்பீடு!
மன்சூர் அலிகான் வலியுறுத்தல் 

சென்னை, ஏப்.20- தமிழ்நாட்டில் தேர்தல் வாக்குப்பதி வின் போது, வெயிலின் காரணமாக பல்  வேறு இடங்களில் வாக்களிக்க வந்த  4 பேர் (ஒருவர் தேர்தல் பணி தன்னார்வ லர்) உயிரிழந்தனர். அவர்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க நடிகர்  மன்சூர் அலிகான் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் கட்டுப்பாடுகளைத் தொடர்வது அபத்தம்!
ப.சிதம்பரம் விமர்சனம்

சென்னை, ஏப்.20- தேர்தல் முடிந்த பிற கும் நடத்தை விதிகளைத்  தொடர்வது மக்களின் உரிமையை மீறுவதா கும் என்று ஒன்றிய முன்  னாள் அமைச்சர் ப. சிதம்  பரம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ‘எக்ஸ்’ சமூகவலை தள பக்கத்தில், கருத்துப் பதிவிட்டுள்ள அவர், ‘தமிழ்நாட்டில் தேர்தலுக்குப் பிறகு  மாதிரி நடத்தை விதிகளின் (எம்சிசி) கீழ்  கட்டுப்பாடுகள் தொடர்வது அபத்தமா னது. இது குடிமக்களின் உரிமைகளை  மீறுவதாகும். ஏதேனும் சந்தேகத்துக்கு ரிய நோக்கம் இருந்தால் தேர்தல் ஆணை யம் தேர்தலுக்குப் பிறகு சுமார் 7 நாட்க ளுக்கு எம்சிசி-ஐ தொடரலாம். ஆனால், ஜூன் 4 வரை தொடர்வது ஏன்?” என்று கேட்டுள்ளார். 

மேலும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, வணிகர்களின் குறைகளைக் கேட்டு, குடிமக்கள் மீதான கட்டுப்பாடு களை கணிசமாக தளர்த்த வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

20,341 மெகாவாட்டைத் தொட்டது மின் தேவை!
சென்னை, ஏப்.20- தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப் படுகிறது. இதனால் மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மின்  தேவையில் கடந்த ஏப்ரல் 8 அன்று 20  ஆயிரத்து 125 மெகாவாட் என்ற அளவில்  இருந்தது, ஆனால் புதிய உச்சமாக ஏப்ரல்  18 அன்று 20 ஆயிரத்து 341 மெகாவாட் அளவிற்கு பதிவாகியுள்ளது. அதே போல மின் பயன்பாடும் அதிகரித்துள் ளது. ஏப்ரல் 18 அன்று ஒரேநாளில் 54.7 லட்சம் யூனிட்கள் கூடுதலாக மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

‘பணப்பட்டுவாடா இல்லாத தேர்தல்’
கிருஷ்ணசாமி மகிழ்ச்சி

தென்காசி, ஏப்.20- அதிமுக சார்பில் தென்காசி தொகுதி யில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி  தலைவர் கிருஷ்ணசாமி, சனிக்கிழமை யன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, “தென்காசி நாடாளு மன்றத் தேர்தலில் ஒத்துழைப்பு கொடுத்  தவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், எந்த வகை யிலும் பணப்பட்டுவாடா இல்லாமல் இந்தத் தேர்தலைச் சந்தித்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.