tamilnadu

img

சென்னையில் அமைதியாக நடைபெற்ற தேர்தல்

சென்னை, ஏப். 19 - வட சென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்ற தேர்தல் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெற்றது. இந்தியா கூட்டணி சார்பில் தென்சென்னையில் திமுக சார்பில் த.சுமதி  (எ) தமிழச்சி தங்கபாண்டிய னும், மத்திய சென்னையில் தயாநிதிமாறனும், வடசென்னையில் கால நிதி வீராசாமியும் போட்டி யிடுகின்றனர். இவர்களை எதிர்த்து அதிமுக, பாஜக  கூட்டணி சார்பில் ஜெ.ஜெய வர்தன், தமிழிசை சௌந் தரராஜன் (தென்சென்னை), பார்த்தசாரதி, வினோஜ்  (மத்திய சென்னை), ராய புரம் மனோ, பால்கனகராஜ் (வடசென்னை) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதன்படி வெள்ளியன்று (ஏப்.19) நடைபெற்ற வாக்கு பதிவு நடைபெற்றது. தொகுதி முழுவதும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இளந்தலைமுறையினர் ஆர்வமுடன் வந்து வாக்க ளித்தனர். குறிப்பாக முதிய வர்கள் காலையிலேயே வந்து வாக்களித்தனர்.

காவல்துறையினர் வாக் காளர்களுக்கு உதவிடும்  வகையில் வழிகாட்டுதல் களை செய்தனர். கடுமை யான வெயில் இருந்தபோது, முதியவர்கள் அமர பந்தல் அமைக்கப்பட்டு, குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வட சென்னை வேட்பா ளர் கலாநிதி வீராசாமி அண்ணாநகரில்  வாக்க ளித்தார்.

தென்சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் தனது குடும்பத்தினருடன் நீலாங்கரையிலும், மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதிமாறன், தனது குடும்பத்தினருடன் நந்தனம் பள்ளியிலும் வாக்களித்தனர். ஒரு வாக்கு சாவடி மையத்தில், மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இவிஎம்  எந்திரத்தில் சின்னத்திற்கு நேராக விளக்கு எரிய வில்லை என்று கூறி மறியல் செய்தார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இந்த தேர்தலில் மாலை  7 மணி நிலவரப்படி வட சென்னையில்  69.26 விழுக்காடும் தென்  சென்னையில் 67.82 விழுக் காடும், மத்திய சென்னை யில் 67.35 விழுக்காடும்,   பதிவாகி உள்ளது.