சென்னை,ஜூலை 4- வேலூர் நாடாளுமன்ற மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி யன்று தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பணப் பட்டுவாடா புகார் தொடர்பாக, தமிழகத்தில் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு மட்டும் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த தொகுதி யில் திமுக சார்பில் அக்கட்சியின் பொரு ளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் மற்றும் பிற கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சைகளும் போட்டியிட்டிருந்தனர். இந்நிலையில் தேர்தல் ஆணையம் வியாழனன்று வெளியிட்டுள்ள அறி விப்பில் கூறியிருப்பதாவது: வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். 11ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. 18ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 19ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக் களை திரும்பப்பெற ஜூலை 22 ஆம் தேதி கடைசி நாள். ஆகஸ்ட் 5 அன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.