tamilnadu

img

‘சட்டவிரோத தேர்தல் பத்திரம் விவகாரத்தில் மோடி அரசின் ஊழலை மறைக்கவே கால அவகாசம் கோருகிறது’

சென்னை, மார்ச் 5 - அரசியல் கட்சிகளுக்கு அநாமதேய தேர்தல்  பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கி யவர்களின் விவரங்களை வெளியிடுவதற்கு, ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ ஜூன் மாதம் வரை  கால அவகாசம் கேட்பது, மோடி அரசைக் காப்பாற்றும் ஏமாற்று நாடகம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாடியுள்ளது.

உச்சநீதிமன்றம் இதனை அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான தேர்தல் பத்திரம்

கடந்த பிப்ரவரி 16 அன்று, உச்ச நீதிமன்றத்தில் 5 பேர் அடங்கிய அரசமைப்பு சட்ட அமர்வு,  தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது. தேர்தல் பத்திரம் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது, வாக்காளர்களின் தகவல் அறியும் உரிமைக்கு எதிரானது, ஜனநா யக நடைமுறையையும், வெளிப்படையான சுதந்திரமான தேர்தலையும் பாதிக்கக் கூடியது என்பது தீர்ப்பின் உள்ளடக்கம்.

மேலும், இந்த தேர்தல் பத்திரங்களை வெளியிட்ட பாரத ஸ்டேட் வங்கி, ஏப்ரல் 12, 2019  முதல் தீர்ப்பளித்த தேதி வரையிலான தேர்தல்  பத்திரம் வாங்கியவர், வாங்கிய தேதி, ஆதாயம் பெற்ற அரசியல் கட்சி, மொத்த தொகை ஆகிய வற்றை 2024 மார்ச் 6 ஆம் தேதிக்குள் இந்திய  தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டு மென்றும், தேர்தல் ஆணையம் தனது இணைய தளத்தில் மார்ச் 13, 2024-க்குள் அதனை  வெளியிட வேண்டுமெனவும் தீர்ப்பளித்திருந் தது.

ஊழலுக்கு துணைபோகும்  பாரத ஸ்டேட் வங்கி
இந்நிலையில், காலக்கெடு முடிவதற்கு ஒருநாள் முன்னதாக, தீர்ப்பின் அடிப்படையில் விபரங்களை அளிக்க ஜூன் 30 வரை அவகாசம் வேண்டுமென பாரத ஸ்டேட் வங்கி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள் ளது. இது பொது நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி,  பாஜகவின் ஊழலுக்குத் துணை போவதாகும். 

உச்ச நீதிமன்றம் ஆணையிட்டாலும் அது அரசமைப்புச் சட்ட அமர்வாகவே இருந்தாலும் பாஜக நினைத்தால்தான் நடக்கும் என்ற நிலை, இந்தியாவில் சட்டத்தின் ஆட்சியே நடைபெறவில்லை என்பதற்கு ஒப்பாகும். 

கால அவகாசம் கேட்பது மக்களை ஏமாற்றுவதாகும்
பாரத ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட சில கிளைகளில்தான் தேர்தல் பத்திரம் வாங்க முடியும். அரசியல் கட்சிகள் இதற்கென பிரத்யேக மான வங்கிக் கணக்கு துவங்க வேண்டும். வங்கிக் கணக்குகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ள நிலையில், பாரத ஸ்டேட் வங்கி போன்ற மிகப்பெரிய வணிக வங்கி இந்த  கணக்குகளை ஊழியர்கள் கையால் எழுது வது போல கால அவகாசம் கேட்பது, இந்திய மக்களை ஏமாற்றுவதற்கான மோசடி நாடகமே! 

மேலும், இது பாஜகவிற்கு சேவகம் செய்வதற் காக, உச்சநீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வு ஒருமனதாக அளித்த தீர்ப்பை அப்பட்ட மாக மீறும் சட்டவிரோத நடவடிக்கையாகும். பாரத ஸ்டேட் வங்கியின் இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்கள் மற்றும் மக்கள், வங்கி மீதான நம்பகத் தன்மையை இழப்பதற்கு இட்டுச் செல்லும்.

உச்சநீதிமன்றத்தை மதிக்காத  ஒன்றிய பாஜக அரசு
பாஜக அரசு இதற்கு முன்பும், அரசமைப்பு சட்ட அமர்வு வழங்கிய தில்லி அரசின் அதி காரம் குறித்த தீர்ப்பையும், தேர்தல் ஆணை யர்கள் நியமன தீர்ப்பையும் சட்டம் போட்டு ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது. எனவே, நீதி மன்றத்தை கிள்ளுக்கீரையாக கூட மதிப்ப தில்லை என்ற பாஜகவின் ஆணவம் வெளிப் பட்டுள்ளது. இதற்கு சுயேட்சை அமைப்பான பாரத ஸ்டேட் வங்கி  தலைமை துணை போயிருப்பது வெட்கக் கேடான செயல். 

இதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய  நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்களை அறிவுறுத்த வேண்டும். அத்துடன், பாரத ஸ்டேட் வங்கியின் கோரிக்கை யை நிராகரித்து, உடனடியாக விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்  என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.