சென்னை, மே 6- தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்த லில் பதிவான வாக்குகளை கொண்ட மின்னணு இயந்திரங் கள் அனைத்தும் 39 மையங்க ளில் பாதுகாப்பாக வைக்கப்பட் டுள்ளன.
வாக்குகள் எண்ணிக்கை பணிக்கு அதிகாரிகள், அலுவ லர்களுக்கு பயிற்சிகள் அளிக் கப்பட்டுள்ளன. வாக்கு எண் ணிக்கையின் போது ஒவ்வொரு மேசையிலும் வேட்பாளர்கள் சார்பில் இருக்க வேண்டிய முக வர்களின் எண்ணிக்கை குறித்து தேர்தலில் போட்டியிட்ட வேட்பா ளர்களுக்கு தேர்தல் நடத்தும் அதி காரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
14 மேஜைகள்; 14 முகவர்கள்!
மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு சட்டப்பேர வைத் தொகுதி வாரியாக முக வர்கள் நியமிக்க வேண்டும். ஒரு தொகுதியில் 14 மேஜைகள் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு மேசைக்கு ஒருவர் வீதம் 14 முக வர்களையும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மேசையில் ஒரு முகவரையும் நியமிக்க வேண்டும்.
தபால் வாக்குகளுக்கு தனி முகவர்
அத்துடன், தபால் வாக்குச் சீட்டுகளை எண்ணுமிடத்தில் ஒரு மேசைக்கு ஒருவர் வீதம் ஆறு மேசைக்கு 6 முகவர்கள் நியமனம் செய்ய வேண்டும். தபால் வாக்குச் சீட்டு எண்ணும் இடத்தில் ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர் இருப் பார். அவருடன் ஒரு முகவரை யும், தபால் வாக்கு உறைகளை ஸ்கேன் செய்யும் அறையில் ஒரு முகவரையும் நியமிக்க வேண் டும்.
ஒரு தொகுதிக்கு 98 முகவர்கள்
ஒரு மக்களவை தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் இருந் தால், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 15 நபர்கள் வீதம் 90 முகவர்களை அரசியல் கட்சிகள் நியமிக்க வேண்டும். தபால் வாக்கு எண்ணும் மேசை கள் மற்றும் தபால் வாக்கு உறை களை ஸ்கேன் செய்யும் அறை ஆகிய இடங்களில் 8 முகவர்கள் நியமனம் செய்ய வேண்டும். மொத்தமாக ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு வேட்பாளர் சார்பில் 98 முகவர்களை நிய மிக்க வேண்டும்.
யார், யார் இருக்கக் கூடாது!
வேட்பாளர்களின் சார்பில் நியமிக்கப்பட்ட முகவர்கள் ஒவ் வொருவரும் 18 வயது நிரம்பியவ ராக இருக்க வேண்டும். இதற் கென வரையறுக்கப்பட்ட படி வம் 18-ல் முகவர்களின் பெயர்கள், கையொப்பத்துடன் இரண்டு புகைப்படங்களையும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்ப டைக்க வேண்டும். அதேபோல், முகவர்களாக யாரை நியமிக்கக் கூடாது என்ற வரையறைகளை யும் தேர்தல் ஆணையம் வகுத் துள்ளது.
அதன்படி, ஒன்றிய மற்றும் மாநில அமைச்சர்கள், சட்டமன்ற, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர், துணை மேயர், நகர்மன் றத் தலைவர், ஊராட்சி ஒன்றி யக் குழுத் தலைவர்கள், ஒன்றிய, மாநில பொதுத்துறை நிறுவனங்க ளின் தலைவர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து நிறுவனங்களின் பகுதி நேர உறுப்பினர்கள், நியாய விலைக் கடை, சத்துணவு, அங்கன்வாடி, சுகாதார மையங்களில் பணி யாற்றும் ஊழியர்கள், அரசு ஊழி யர்கள் ஆகியோரை முகவர் களாக நியமிக்கக் கூடாது என தெரி விக்கப்பட்டுள்ளது.