tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா உறுதி: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு

தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு குறித்த விபரங்களை தெரிவிக்கும் வகையில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தமிழகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 மாத குழந்தை  4பேர் உட்பட 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி  செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.