tamilnadu

img

எடிபன் நிறுவனம் தமிழகத்தில் ரூ.540 கோடி முதலீடு செய்கிறது

சென்னை,பிப்.6- எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்று தமிழ்நாடு அரசு தெரிவித் துள்ளது.

இது தொடர்பாக மாநில அரசு வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது:

“தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்.5 அன்று ஸ்பெயின்  நாட்டின் மாட்ரிட் நகரில், வாகன உதிரிப் பொருட்கள் தயாரிப்பில் உலகின்  முன்னணி நிறுவனமான கெஸ்டாம்ப் நிறுவனம், பொறியியல் வடிவமைப்பு மற்றும் தொழிற்கல்விக்கான கருவி களை உற்பத்தி செய்யும் எடிபன் நிறுவனம், ரயில் உற்பத்தித் துறையில் முன்னணி நிறுவனமான டால்கோ நிறுவனம், உயர் தொழில்நுட்ப உயிரி யல் பொருட்களின் ஆராய்ச்சியையும் உற்பத்தியையும் மேற்கொள்ளும் மேப்ட்ரீ நிறுவனம் ஆகிய நிறுவனங் களைச் சேர்ந்த உயர் நிர்வாகிகளை சந்தித்து, வளமான வாய்ப்புகள் உள்ள  தமிழ்நாட்டில் நிலவும் தொழில் முதலீட்டுக்கான சூழல்களை எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார். இச்சந்திப்பின் பலனாக எடிபன்  நிறுவனத்துடன் ரூ.540 கோடி மதிப்பி லான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

இச்சந்திப்பின் போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, எப்டின் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலை மைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு, முதலமைச்சரின் செயலாளர் பு. உமாநாத் ஆகியோர் உடனிருந்தனர்.

இவ்வாறு தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இன்று திரும்புகிறார் முதல்வர்
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜனவரி 27 அன்று வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் சென்றார். இவருடன் தமிழ் நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவும் ஸ்பெயினுக்கு சென்றிருந் தார். அங்கு பல்வேறு தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ் நாட்டிற்கு தொழில் தொடங்க வர  வேண்டும் என அழைப்பு விடுத்துள் ளார். மேலும், முதலமைச்சர் முன்னி லையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இந்நிலையில் தனது சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு முதல மைச்சர்  பிப்.7 அன்று தமிழ்நாடு திரும்புகிறார்.