ரஜினி பேசியது சரிதானா?
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள னர். நடிகர் ரஜினிகாந்தும் இந்த விழாவில் பங்கேற் றுள்ளார். இதனால் புல்லரித்துப் போன வெங்கய்ய நாயுடு இந்த விழாவுக்கு வருமாறு ரஜினிகாந்தை அழைத்த போது, அவர் மும்பையில் படப்பிடிப்பு இருப்பதால்,தம்மால் கலந்து கொள்ள இயலாது என்று கூறினார். ஆனால், மும்பையில் தற்போது கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், படப்பிடிப்பு ரத்தாகி விட்டது. கடவுள்தான் மும்பையில் மழை பெய்ய வைத்து ரஜினியை இங்கு அனுப்பியுள்ளார். கட வுளுக்கு நன்றி என்று பேசியுள்ளார். மும்பையில் கடந்த சில நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு லட்சக்க ணக்கான மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்த வெள்ளப்பெருக்கிற்கு கடவுளை கைகாட்டி விடு வது எந்த வகையிலும் நியாயமல்ல. கடவுள் சிலரிடம் மாட்டிக் கொண்டு படாதபாடு படுகிறார். விழாவில், ரஜினிகாந்த் பேசும்போது, ஜம்மு- காஷ்மீர் பிரச்சனையை கையாண்டதற்காக அமித்ஷாவை வெகு வாகப் பாராட்டியுள்ளார். காஷ்மீர் பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் அமித்ஷா சிறப்பாக பேசினார் என்றும் பாராட்டினார். இதைக் கேட்ட அமித்ஷாவுக்கு வாயெல்லாம் பல். மேலும், ரஜினி பேசுகையில், அமித்ஷாவும் மோடி யும் கிருஷ்ணனும் அர்ஜூனனும் போன்றவர்கள். இவர்களில் யார் அர்ஜூனன், யார் கிருஷ்ணன் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும் என்று கூறி யுள்ளார். இவர்கள் இருவருமே அர்ஜூனன் போன்ற வர்கள்தான். இருவருக்குமான கீதையும் பாதையும் நாக்பூ ரிலிருந்துதான் வருகிறது என்பது ரஜினிக்கும் தெரி யும். அண்மையில், புதிய கல்விக் கொள்கையை விமர்சித்த நடிகர் சூர்யாவுக்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்தார். உடனே தமிழிசை உள்ளிட்ட பாஜகவினர் ரஜினியின் மீது பாய்ந்து, ரஜினி குழப்புகிறார் என்று பிறாண்டினர். ரஜினியும், பாஜகவும் சேர்ந்து குழப்பும் குட்டையில் ரஜினி மீனா, தூண்டில் புழுவா என்பதை மோடியும், அமித்ஷாவுமே அறிவர்.
தா.பா. கருத்து முறைதானா?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியனின் நேர்காணல் ஜூனியர் விகடன் (14.08.19) இதழில் வெளியாகியுள்ளது. அவர் சார்ந்துள்ள கட்சியின் மீதே அவர் சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், கம்யூனிஸ்ட் கட்சியிலும்கூட சாதிய உணர்வு இருக்கிறது. ஆனால், வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். மேற்கு வங்கத்தில் அதனால்தான் அந்தக் கட்சி பயங்கர சோத னையைச் சந்தித்திருக்கிறது என்று போகிற போக்கில் ஒரு கருத்தை கூறியுள்ளார். தோழர் தா.பா. , போன்ற மூத்த தலைவர்கள் அனைத்தும் அறிந்திருந்தும் இவ்வாறு பேசுவது எந்த வகையிலும் பொருத்தமுடையது அல்ல. மேற்குவங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் இடம் பெற்றுள்ள இடது முன்னணி அரசு 34 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. நிலச் சீர்திருத்தம் மற்றும் சமூக சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக ஒப்பீட்டு அளவில் சாதியத்தின் தாக்கம் பெரு மளவு குறைக்கப்பட்டது. வர்க்கமும் சாதியும் பின்னிப் பிணைந்துள்ள இந்திய சமூகத்தில் சாதியக் கொடுமை களையும், வர்க்க வேறுபாடுகளையும் எதிர்த்துபோராட வேண்டியுள்ளது. மேற்கு வங்கத்தில் கிடைத்த குறைந்தபட்ச அதிகாரத்தைக் கொண்டு இடதுமுன்னணி அரசு சாதிய வேறுபாடுகளை களைய பாடுபட்டது. பல்வேறு துறைகளில் மேற்கு வங்கம் மகத்தான சாதனையை படைத்தது. இந்த விசயங்கள் தோழர் தா.பா.வுக்கு நன்றாகவே தெரியும். மேற்கு வங்கத்தில் இடது முன்னணி அரசை அகற்ற மம்தா பானர்ஜியுடன் இணைந்து வலது, இடது, தீவிரவாத இயக்கங்களும், பல்வேறு சீர்குலைவு சக்திகளும் மேற்கொண்ட சதி நாடறிந்த ஒன்று. இடது முன்னணி அதிகாரத்தில் இல்லாத மேற்கு வங்கம் இன்றைக்கு மம்தா மற்றும் பாஜக கும்பலிடம் மாட்டிக் கொண்டு என்ன பாடுபடு கிறது என்பது அன்றாடச் செய்திகளாக வெளி வந்து கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில், கடந்த கால அனு பவங்களிலிருந்து இடதுசாரிகள் தகுந்த பாடம் கற்பார்கள். நல்லதை பெருக்கி அல்லவை நீக்கி முன்னேறு வார்கள் என்பது உறுதி. ஆனால், இன்றைக்கு மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் சந்திக்கிற பிரச்ச னைகளுக்கு சாதிதான் அடிப்படை என்று கூறுவது எவ்வித அடிப்படையும் அற்றது. தன் மீது சாதிய முத்திரை குத்தப்படுவதை கடுமையாக ஆட்சேபிக்கும் அவர், ஒரு இயக்கத்தின் மீது அந்த முத்திரையை சர்வசாதா ரணமாக குத்துவது முறைதானா? தன்னுடைய புத்தகத்திலும் கூட பல்வேறு சர்சைக்குரிய கருத்துகளை தோழர் தா.பா. தெரி வித்திருந்தார். அதே பாணியில் இந்த பேட்டியும் அமைந்திருக்கிறது. அவருடைய நீண்ட நெடிய அனு பவம் இளைய தோழர்களுக்கு உத்வேகம் ஊட்டுவதாக அமைய வேண்டுமேயன்றி, வீட்டுக்குள்ளே இருந்து கொண்டு கல்லை உருவுவதாக இருந்து விடக் கூடாது அல்லவா?
- மதுரை சொக்கன்