நாகர்கோவில் பார்வதிபுரம் சாரதா நகர் 7 ஆவது தெருவைச் சேர்ந்தவர் இ.நாராயணன். தீக்கதிர் நாளிதழாக வெளிவரத் தொடங்கியது முதல் நாகர்கோவில் முகவராக பணியாற்றிய இ.நாராயணன் (வயது 79) மார்ச் 5 செவ்வாயன்று காலமானார். அன்னாரது மறைவுச் செய்தியறிந்து சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.அகமது உசேன், என்.எஸ்.கண்ணன், என்.ரெஜீஸ் குமார், மூத்த தோழர் என்.முருகேசன், மாநகரச்செயலாளர் பேராசிரியர் த.மனோகர ஜஸ்டஸ், தோவாளை வட்டார செயலாளர் எஸ்.மிக்கேல், தீக்கதிர் துணை ஆசிரியர் சி.முருகேசன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்ச்சி புதனன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.