tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

வறண்ட நிலையே நிலவும்: வானிலை ஆய்வு  மையம்

சென்னை, ஜன.20-  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருகிற 26 ஆம் தேதி வரைக்கும் வறண்ட வானிலை  நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் திருக்கிறது.

இது குறித்து வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், கிழக்கு திசை  காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஞாயிற்றுக்கிழமை (ஜன.21) தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகாலையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

ஜன.22 முதல் 26 ஆம் தேதி வரை  தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால்  பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர்  பகுதிகளில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

சிறுவர்களை வேலைக்கு அமர்த்த கூடாது: திருமாவளவன்
சென்னை,ஜன.20- சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் கொடுமையைத் தடுக்க அரசு ஆணையம் அமைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். திமுக எம்எல்ஏவின் மகன், மருமகள்  ஆகியோர் வீட்டு வேலைக்குச் சென்ற மாணவியை வதைத்துள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு விசிக தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்ட அறிக்கை யில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநருங்குன்றம் கிராமம், தலித் சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிக்கு நேர்ந்துள்ள வன்கொடுமைகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மருத்துவம் படிக்கும் கனவில் இருந்த மாணவி வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.

வீட்டு உரிமையாளர்கள் மாணவியைக் கொடுமைப்படுத்தி உள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவியின் புகாரையடுத்து, இந்த சம்பவம் வெளிச் சத்துக்கு வந்தது. அரசியல் செல்வாக் குள்ள குடும்பம் எனினும் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது ஆறுதல். நெஞ்சில் ஈரமின்றி இவ்வாறு கொடு மைப்படுத்தும் கொடிய போக்கு மிகுந்த  அதிர்ச்சி அளிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

சாலை விபத்தில்  4 பேர் பலி: முதலமைச்சர் நிதியுதவி

சென்னை,ஜன.20- தஞ்சாவூர் சாலை விபத்தில் பலியான நான்கு பேரின் குடும்பங் களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டம், மூணா வயல் கிராமத்தில் இருந்து நான்கு  சக்கர வாகனத்தில் வேளாங் கண்ணிக்கு குடும்ப நிகழ்ச்சிக்காக செல்லும் வழியில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், சேதுபாவாசத்திரம், மனோரா அருகில் சனிக்கிழமை (ஜன.20) அதிகாலையில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த விபத்தில் பாக்கியராஜ் (62), ஞானம்மாள் (60), ராணி (40), சின்ன பாண்டி (40) ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த செய்தியை கேட்டு வேதனையடைந்தேன்.

இந்த விபத்தில் பலத்த காய மடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருபவர்களுக்கு சிறப்பு  சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள் ளேன்.

மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கு உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித் துக் கொள்வதோடு, உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கு தலா  ரூ.2 லட்சம், பலத்த காயமடைந் தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா  ரூ.25 ஆயிரம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.