tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில்  டி.ஆர்.பாலு  வாக்கு சேகரிப்பு

திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு செவ்வாயன்று (ஏப்.9) மதுரவாயல் தொகுதி, 150வது வட்டம், வானகரம், அடையாளம்பட்டு, அயப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். காரம்பாக்கம் க.கணபதி எம்எல்ஏ, வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் துரை வீரமணி, சிபிஎம் தொகுதி பொறுப்பாளர் க.பீம்ராவ், மதுரவாயல் 

வேளச்சேரியில்  தமிழச்சி  தங்கபாண்டியனுக்கு  பெண்கள்  உற்சாக  வரவேற்பு

தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் செவ்வாயன்று (ஏப்.9) வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட 175வது வட்டத்தில் வாக்கு சேகரித்தார். திமுக தென்சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், பகுதிச் செயலாளர் அரிமா சேகர், அசன் மவுலானா எம்எல்ஏ, சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, பாரதிராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் வெட்டிக் கொலை: 3 பேர் கைது

அம்பத்தூர், ஏப்.10- திருவேற்காட்டில் நள்ளிரவில் இளை ஞரை வெட்டிக் கொலை செய்த 3 பேரை புதன்கிழமை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவேற்காடு, சுந்தரசோழபுரம் செல்லி யம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர்  விஜயகாந்த் (19). இவர் கூலித்தொழிலாளி. 

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்து விஜய காந்தை வெளியே வரவைத்து  3 மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக்கொன்றனர். 

இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து  ஆரோக்கிய சாமி (20), விக்னேஷ் (20), சரவணன் (20) ஆகி யோரை கைது செய்தனர்.

சென்னையில்  611 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
சென்னை,ஏப்.10- மக்களவைத் தேர்தலை  முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரிய வுள்ள காவலர்கள் வாக்கு ச்சாவடி வாரியாக கணினி குலுக்கல் முறை யில் தேர்வு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர்  ராதாகிருஷ்ணன் தலைமை யில் செவ்வாயன்று சென்னையில் நடை பெற்றது.

இதன்பின்னர் செய்தி யாளர்களிடம் ராதா கிருஷ்ணன் கூறியதாவது:- சென்னையில் வாக்குச் சாவடி அலுவலர்கள் பணிக்கு 19 ஆயிரத்து 419  பணியாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். அவர்களில் 19 ஆயிரத்து 97 பேருக்கு  பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 579 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டிருந் தது.

தற்போது, 32 வாக்குச் சாவடிகள் கூடுதலாக பதற்ற மான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது. இதுவரையில் 11 லட்சத்து 56 ஆயிரத்து 524 பேருக்கு ‘பூத் சிலிப்’ கொடுக்கப்பட்டுள்ளது. 85 வயதிற்கும் மேற்பட் டோர் மற்றும் மாற்றுத்திறனா ளிகள் என 82 பேர் வாக்களித் துள்ளனர். வாக்குச்சாவடி அமைந்துள்ள 944 இடங்க ளுக்கு ரோந்து பணியில் ஈடு படக்கூடிய 239 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வாக்குச்சாவடி யில் உள்ள வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏதேனும் பிரச் சினை ஏற்பட்டால் மாற்று  வாக்கு எந்திரம் நிறுவப்ப டும். இவ்வாறு அவர் கூறி