திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு சனிக்கிழமையன்று (ஏப்.6) தாம்பரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பெருந்திரளாக வாக்கு சேகரிப்பில் கலந்து கொண்டனர்.