tamilnadu

img

மாமல்லபுரம் கடலில் டால்பின் மீன்கள் பார்வையிட குவியும் சுற்றுலா பயணிகள்

மாமல்லபுரம், செப். 6- காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்ல புரம் கடற்கரையில் அமைந்துள்ள குட வரை கோயில் மற்றும் கடற்கரை அழகை கண்டு ரசிப்பதற்காக நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் ஏராள மான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.  இதில், வெளிநாட்டு சுற்றுலா பயணி கள் கடற்கரையில் சூரிய குளியல்  மற்றும் அலை சறுக்கு விளையாட்டு களில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், மாமல்லபுரம் கடல் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக டால்பின் மீன்கள் கூட்டம், கூட்டமாக கடற்கரைக்கு மிக அருகில் சுற்றித்திரிந்து வருகின்றன. மேலும், அவ்வப்போது கடலில் இருந்து  எகிறி டைவ் அடித்து மீண்டும் கடலில் குதித்து விளையாடுகின்றன. இதனை, சுற்றுலா பயணிகள் மிகுந்த  மகிழ்ச்சியுடனும் மற்றும் ஆர்வத்துடன் நேரில் கண்டு ரசித்து வருகின்றனர். மேலும், ஆழ்கடல் பகுதிகளில் மட்டுமே காணக்கூடிய டால்பீன் மீன்கள் மிகவும்  அரிதாக எப்போதாவது, கடற்கரைக்கு அருகில் இதுமாதிரி கூட்டமாக சுற்றித் திரியும் எனவும். டால்பீன்களை கண்டு  ரசிப்பதற்காக கடற்கரைக்கு சுற்றுலா  பயணிகளும் அதிகளவில் வருவதாக உள்ளூர் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.