tamilnadu

img

வழக்கை காரணம் காட்டி பணி மறுக்கக்கூடாது...

சென்னை:
குடும்பச் சண்டை வழக்கை காரணம் காட்டி தகுதியுடைய நபருக்கு காவலர் பணி வழங்க மறுக்கக்கூடாது என காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தைச்சேர்ந்த சினேகா என்ற இளம் பெண், உயர்நீதிமன்றத்தில் தாக் கல் செய்துள்ள மனுவில், கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்றதாகவும், சான்றிதழ்கள் சரிபார்க்கப் பட்டு பணியில் சேர இருந்த தருவாயில், தன் மீது கடந்த 2016ஆம் ஆண்டு பதியப்பட்ட குற்ற வழக்கை காரணம் காட்டி காவலர் பணி வழங்க முடியாது என நாகப்பட்டி
னம் எஸ்பி உத்தரவிட்டதாக குறிப் பிட்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டு தனது தாய், சகோதரி மற்றும் நாத்தனார் ஆகியோருக்கிடையே நடைபெற்ற மாமியார், மருமகள் குடும்பச் சண்டையில், அப்போது மைனராக இருந்த தனது பெயரையும் குற்ற வழக்கில்காவல்துறையினர் சேர்த்துவிட்டதாகவும், பின்னர் சமரசம் ஏற்பட்ட நிலையில் தனக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருந்தார்.இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், ” குடும்பத்திற்குள் சண்டைகள் என்பது ஒரு சாதாரண நிகழ்வுதான். இதை ஒரு பெரிய குற்ற நிகழ்வாக கருத வேண்டியது இல்லை. மேலும், குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டபோது மனுதாரர் மைனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.காவல்துறையில் சேர அவருக்கு எல்லா தகுதிகளும் இருக் கும்போது, சாதாரண வழக்கை காரணம் காட்டி பணி வழங்க மறுப்பது ஏற்புடையதல்ல. எனவே மனுதாரர் எல்லா தகுதிகளையும் கொண்டிருக்கும் பட்சத் தில் 4 வாரங்களில் உரிய காவலர் பணி வழங்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.