சென்னையில் பெண் காவலரிடம் அத்துமீறலில் ஈடுபட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் இருவர், கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டதுடன், கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில், நிர்வாகிகள் 2 பேர் பெண் காவலர் ஒருவரிடம் அத்துமீறி நடந்துகொண்டனர். இதை அடுத்து அப்பெண் காவலர் புகார் அளித்த நிலையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவியை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, திமுக இளைஞரணி நிர்வாகிகளான ஏகாம்பரம் மற்றும் பிரவீன் ஆகியோர் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவ்விருவரும் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இருவரையும் போலீசார் நெற்று இரவு கைது செய்தனர்.