tamilnadu

img

டி.எம்.கிருஷ்ணாவின் திறமை மறுதலிக்க முடியாதது

சென்னை, மார்ச் 23- தமிழக முதல்வர் மு.க. ஸ்டா லின் தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்  கத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறி யிருப்பதாவது:

“சிறந்த பாடகர் டி.எம். கிருஷ்ணா சென்னை மியூசிக் அகா டமி சார்பில் 2024-ம் ஆண்டுக்கான ‘சங்கீத கலாநிதி’ விருதுக்குத் தேர்  வாகி இருப்பதற்கு எனது அன்பான  வாழ்த்துகளையும் பாராட்டுகளை யும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிருஷ்ணா கொண்டுள்ள முற்  போக்கு அரசியல் நிலைப்பாடுகளி னாலும், அவர் எளியோரைப் பற்றித்  தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு  தரப்பார் காழ்ப்புணர்விலும் உள் நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது.

இதில் மனிதநேயத்தை அடிப்ப டையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநிகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அற வழியில், அமைதிவழியில் போரா டிய தந்தை பெரியாரைத் தேவை யின்றி வசைபாடுவது நியாயமல்ல.  பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனை களையும் படிக்கும் எவரும் இப்படி  அவதூறு சேற்றை வீச முற்பட மாட்  டார்கள்.

கிருஷ்ணா இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய  மரியாதையையும் அங்கீகாரத்தை யும் வழங்கிடும் வகையில் தகுதி யானவரைத் தேர்ந்தெடுத்த மியூ சிக் அகாடெமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.

டி.எம். கிருஷ்ணா எனும் கலை ஞனின் திறமை எவராலும் மறுத லிக்க முடியாதது. அரசியலில் மத  நம்பிக்கைகளைக் கலந்தது போல,  இசையிலும் குறுகிய அரசியலைக்  கலக்க வேண்டாம்! விரிந்த மானு டப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை!.” 

2 வாரத்தில் 76 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு

ஒன்றிய அரசு தலையிட்டு  நடவடிக்கை எடுக்க கடிதம்

சென்னை, மார்ச் 23- இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களுக்குத் தேவை யான சட்ட உதவிகளை உறுதி செய்ய வேண்டும் என்று ஒன்றிய அர சின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு  முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

“இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. கடந்த சில  வாரங்களாக பல்வேறு சம்பவங்களில் இந்திய மீனவர்கள் தொடர்ந்து  கைது செய்யப்படுவது, அவர்களது குடும்பத்தினர், மீனவ சமூகத்தி னரிடையே பெரும் மன உளைச்சலையும் நிச்சயமற்ற சூழலையும்  ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 21 அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் கைது  செய்யப்பட்டதுடன், 5 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை யினர் சிறைபிடித்துள்ளனர்.

கடந்த இரு வாரங்களில் மட்டும் 76 மீன வர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பாதிக்கப்பட்ட மீனவர்களின் பாதுகாப்பு, வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு இந்தப் பிரச்சனையில் தாமதம் ஏதுமின்றி, தீர்வு  காண உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை நீதி மன்றங்களில் தண்டனை பெற்று, சிறைகளில் வாடும் மீனவர் களுக்குத் தேவையான சட்ட உதவிகளை உறுதி செய்ய வேண்டும்.  இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களை யும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நட வடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் தனது  கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.