சென்னை போராட்டத்தின்போது மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தி யாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: வரலாறு காணாத வெள்ளம், புயல் சேதத்தில் தமிழகம் பாதிக்கப்பட்டு பரி தவித்து வருகிறது. வீடு, நிலம், வியாபாரப் பொருட்கள், வாகனங்கள் என பலவற்றை மக்கள் இழந்து தவிக்கின்றனர்.
நிதி நெருக்கடி இருந்தபோதும், மாநில அரசு தனது சொந்த நிதியில் இருந்து ஆக்கப்பூர்வமான நிவாரணப் பணி களை மேற்கொண்டது; நிவாரணம் வழங்கி யதை பாராட்டுகிறோம். இத்தகைய பேரிடரை ஒன்றிய அமைச்சர்கள் பார்வையிட்டு, மத்தியக் குழு ஆய்வு செய்து பல நாட்களாகிறது.
21 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் வேண்டுமென்று முதலமைச்சர் தொடர்ந்து கோரி வருகிறார். அதை பிரதமர் பரிசீலிப்ப தாக தெரியவில்லை. திருச்சிக்கு வந்த பிரதமர், ஏற்கெனவே ஏராளமான நிதி கொடுத்ததாக கூறியுள்ளார். அதாவது, தற்போது நிதி கொடுக்க மாட்டோம் என்று சொல்லாமல் சொல்கிறார். மாநில அரசு கோரிய நிதியில் குறைந்தபட்சம் ஒரு 2 ஆயிரம் கோடி ரூபாயைக் கூட கொடுக்க முடியாது என்றால், அதைச் சொல்ல ஒரு பிரதமர் தேவைதானா? தமிழகத்திற்கு விரோதமான, வஞ்சிக்கிற, மக்களுக்கு துரோகம் செய்கிற ஒன்றிய அரசை கண்டிக் கிறோம். ஒன்றிய அரசுக்கு அதிக வரி செலுத்தும் மாநிலங்களில் 3-ஆவது இடத்தில் தமிழகம் உள்ளது.
அத்தகைய மாநிலம் பாதிக்கப்பட்டபோதும், நிவாரண நிதியை வழங்க மறுக்கின்றனர். பாஜக ஆட்சி செய்யாத மாநிலம் என்பதற்காக நிதி தர மறுக்கின்றனர். உ.பி. உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதியை கொடுப்பதையே விதியாக வைத்துள்ளனர். எனவே, ஒன்றிய அரசின் பாரபட்ச மான போக்கை கண்டித்தும், நிவாரண நிதி யை வழங்க வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெறுகிறது. இதற்கு பிறகும் ஒன்றிய அரசு நிதியை ஒதுக்க வில்லையென்றால், அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்று திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்துவோம்.
தமிழகத்திற்கு ரூ. 900 கோடி நிதி கொடுத்துள்ளதாக பாஜக தலைவர்கள் கூறுகின்றனர். அவர்களுக்கு அரசியல் அரிச்சுவடி கூட தெரிவதில்லை. பேரிடர் நிகழ்ந்தாலும் நிகழாவிட்டாலும் ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசு, மாநில அரசுகளுக்கு பேரிடர் நிதியை ஒதுக்கி, மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்கும். அந்த நிதியில், 10 விழுக்காட்டை மட்டுமே பேரிடரின்போது நிவாரணத்திற்கு செலவழிக்க முடியும். எஞ்சியதொகையை உட்கட்ட மைப்புக்குதான் செலவிட முடியும். தமிழக அரசு 6 ஆயிரம் ரூபாய் நிவார ணம் வழங்கியதற்கு மட்டும் 1500 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. ஆனால், முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்று, உண்மைக்கு மாறாக, ஒன்றிய அரசு நிதியிலிருந்து நிவாரணம் தருவ தாக பாஜக தலைவர்கள் பேசி வருகின்ற னர். 2017-22 வரை 1.23 லட்சம் கோடி ரூபாய் நிவாரண நிதியாக தமிழக அரசு கேட்டுள்ளது. ஒன்றிய அரசு 5 ஆயி ரம் கோடி ரூபாய்தான் கொடுத்துள்ளது. அதிமுக, திமுக அரசு கேட்டதில் 4 விழுக்காடு கூட தரவில்லை. இதை ‘வர லாறு காணாத’ வகையில் கொடுத்ததாக பிரதமர் கூறுவது ‘வரலாறு காணாத’ பொய், ஏமாற்று வேலை. இதை யெல்லாம் கேள்வி கேட்பார்கள் என்பதால் தான் நாடாளுமன்றத்தில் இருந்து எம்.பி.க் களை தற்காலிக நீக்கம் செய்துள்ளனர். திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு அணி தலைவர்களுடன் கலந்து பேசி அடுத்தகட்ட போராட்ட த்தை முடிவு செய்வோம். இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
முன்னதாக கட்சியின் முற்றுகைப் போராட்டத்தில் மத்தியக்குழு உறுப்பி னர் பி. சம்பத், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், என். குணசேகரன், மாவட்டச் செயலாளர்கள் ஜி. செல்வா (மத்திய சென்னை), எல். சுந்தரராஜன் (வடசென்னை), ஆர். வேல் முருகன் (தென்சென்னை), ஜி. கோபால் (திருவள்ளூர்), சி. சங்கர் (காஞ்சிபுரம்), பாரதி அண்ணா (செங்கல்பட்டு) மாநி லக்குழு உறுப்பினர்கள் பா. சுந்தர் ராஜன், எம். ராமகிருஷ்ணன், இ. முத்துக் குமார், பா. ஜான்சிராணி, வே. ராஜசேக ரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.