ஊராட்சிமன்றத் தலைவரின் அதிகாரம் பறிப்பு
புதுக்கோட்டை,ஜன. 25 - புதுக்கோட்டை மாவட்டத் தைச் சேர்ந்த நாட்டாணி புரசக்குடி ஊராட்சிமன்றத் தலைவர் மீது தெரிவிக்கப் பட்ட பல்வேறு புகார்களின் பேரில், காசோலையில் கை யெழுத்திடும் அதிகாரத்தை பறித்து மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா உத்தர விட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட் டம் ஆவுடையார்கோவில் ஒன்றியத்தைச் சேர்ந்தது நாட்டாணிபுரசக்குடி ஊரா ட்சி. இதன் தலைவராக இருப்பவர் சீதாலட்சுமி. ஊராட்சிப் பணிகளில் கவ னம் செலுத்தாமல் அடிப் படை வசதிகளை நிறை வேற்றித் தராமல் இருந்த தாக இவர் மீது கடந்த சில மாதங்களாகவே பல்வேறு புகார்கள் வந்துள்ளன.
இதுதொடர்பாக ஊரா ட்சிகள் சட்டப்படி விளக்கம் கோரப்பட்டிருக்கிறது. அந்த விளக்கம் திருப்தி கரமாக இல்லாததைத் தொடர்ந்து, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 203-ன்படி ஊராட்சிக் கணக்கில் காசோலையில் கையெழுத்திடும் அதிகா ரத்தைப் பறித்து மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா உத்தரவிட்டுள்ளார்.
அமலாக்கத்துறை மீது உச்சநீதிமன்றம் சாடல்
புதுதில்லி, ஜன. 25 - திண்டுக்கல் அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மீதான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறை உள்நோக் கத்துடன் சில வழக்குகளை கையில் எடுக்கிறது என்று சாடியது.