குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி வியாழனன்று (மார்ச் 14) சென்னை உயர்நீதிமன்ற வாயிலில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் வழக்கறிஞர்கள் கு.பாரதி (ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம்), எஸ்.ஜிம்ராஜ் மில்டன் (மனித உரிமை பாதுகாப்பு மையம்), ராஜாமுகமது (ஏஐஎல்சி), விஜயகுமார் (ஜனநாயகம் மற்றும் சமூக நலனுக்கான வழக்கறிஞர் மையம்), பார்வேந்தன் (சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம்), பி.சீனிவாசன் (அகில இந்திய வழக்கறிஞர் சங்கம்) உள்ளிட்டோர் பேசினர்.