நிர்பயா நினைவு நாளையொட்டி குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு சென்னை மாவட்டம் சார்பில் புரசையில் திங்களன்று (டிச.16) ஆர்ப்பாட்ட நடைபெற்றது. உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் வடசென்னை மாவட்ட அமைப்பாளர் மணிமேகலை தலைமை தாங்கினார். சிஐடியு வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், செயலாளர் சி.திருவேட்டை, பொருளாளர் வி.குப்புசாமி, தென்சென்னை மாவட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன், சாந்தி, என்.நிர்மலா (வடசென்னை அங்கன்வாடி), மாநிலக்குழு உறுப்பினர் தனலட்சுமி, தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் (உ.பெ.ஒருங்கிணைப்புக்குழு), நிர்மலா (தென்சென்னை அங்கன்வாடி) உட்பட பலர் கலந்து கொண்டனர்.