மின்வாரியத் தொழிலாளர்கள் ஆதரவாக ஆர்ப்பாட்டம்
உத்திரபிரதேசத்தில் மின்வாரியம் தனியார் மயமாக்கப்பட்டதற்கு எதிராக போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் மணலி துணைமின் நிலையத்தில் கோட்டச் செயலாளர் திருநீர் செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வடக்கு செயலாளர் சந்திரசேகர், சிறப்புத் தலைவர் மதன் கோபால், பொருளாளர் சத்தியமூர்த்தி, முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் கே.வெங்கட்டையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.