வெங்காயம் மற்றும் காய்கறிகள் கடுமையான உயர்ந்ததை கண்டித்தும், விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் திருவொற்றியூரில் சனிக்கிழமையன்று (டிச.7) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கே.கே. புஷ்பா தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எஸ். பாக்கியம், வி.அம்சா, அ.கலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.