ப ணமதிப்பு நீக்கம் எனும் மிகப்பெரும் தாக்குதல் இந்த நாட்டின் மக்கள் மீது நடத்தப்பட்டு 7 ஆண்டுகள் ஆகிவிட்டது. மோடி அரசின் இந்த நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்வாதாரங்களையும் அழித்துவிடும் என்று அன்றைக்கு நாடாளுமன்றத்தில் நான் உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எச்சரித்தோம்; இந்த நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெறுமாறு வற்புறுத்தினோம். அன்றைக்கு நாங்கள் சொன்னது அப்படியே நடந்தது. மக்களின் வாழ்வாதாரம் அழிந்து போனது. மிகப்பெருவாரியான நமது மக்களின் வாழ்வாதாரங்களை அதற்கு பிறகாவது மேம்படுத்து வதில் மோடி அரசு அப்பட்டமாக தோல்வியடைந் துள்ளது. பணமதிப்பு நீக்கத்திற்காக இவர்கள் குறிப்பிட்ட ஒரு இலக்கு கூட நிறைவேறவில்லை. மாறாக பொருளாதாரத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல்கள் தொடர்ந்து தீவிரமாக நீடிக்கின்றன.