தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 81 லட்சத்து 30 ஆயிரத்து 25 பேர் பதிவு செய்துள்ளதாக தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையின் கொள்கைக் குறிப்பு தெரிவிக்கிறது. ஆனாலும் காலியாகவுள்ள அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களையும் போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட அரசுத் துறை பணியிடங்களையும் முழுமையாக நிரப்புவதற்கு தமிழக அரசு மறுத்து வருகிறது.
சென்னை, டிச.8- வேலையின்மைக்கு எதிராகவும் இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உரு வாக்கக்கோரியும் 5 ஆயிரம் கிரமங்களில் பிரச்சாரம் மேற்கொள்வது, பிப்ரவரி 18 அன்று கோட்டை நோக்கி பேரணி நடத்து வது என்று வாலிபர் சங்கத்தின் மாநில சிறப்பு மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வளர்ச்சிக்கான மாநில சிறப்பு மாநாடு செங்கல்பட்டு மாவட் டம் சிங்க பெருமாள் கோயிலில் டிசம்பர் 8 ஞாயிறன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாநிலத் தலை வர் என்.ரெஜீஸ்குமார் தலைமை தாங்கி னார். மாவட்டத் தலைவர் மபா.நந்தன் வர வேற்றார். மாநாட்டில் சிஐடியு மாநிலத்தலை வர் அ.சவுந்தரராசன், தமிழ்நாடு திட்டக்குழு வின் முன்னாள் துணைத் தலைவர் மு.நாக நாதன், வாலிபர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் பி.ஏ.முகமதுரியாஸ், அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி, பொரு ளாதார அறிஞர் பேராசிரியர் ஜெயரஞ்சன், சிஐடியு மாநில துணைப்பொதுச் செயலா ளர் எஸ்.கண்ணன் உள்ளிட்டோர் பேசினர். மாநிலப் பொருளாளர் தீபா, மத்தி யக்குழு உறுப்பினர்கள் சி.பாலச்சந்திர போஸ், செ.மணிகண்டன், மாநில துணைத் தலைவர் கே.எஸ்.கார்த்தீஷ்குமார் ஆகி யோர் மாநாட்டு தீர்மானங்களை விளக்கிப் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து வாலி பர் சங்கத்தின் மாநிலச்செயலாளர் எஸ்.பாலா பேசினார். மாவட்டச் செயலாளர் க.புரு சோத்தமன் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னம் வருமாறு: ஒருவர் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு அடிப்படைத் தேவை கல்வியும் வேலையும். ஆனால், 72 ஆண்டுக்கால சுதந்திர இந்தியா வில் கல்வியும் வேலையும் கனவாகவே உள்ளது. உலகிலேயே அதிகமான இளை ஞர்களைக் கொண்ட நாடு இந்தியா. ஆனால் இத்தகைய இளைஞர் சக்தியை பயன் படுத்தும் வகையில் கொள்கைகளையோ அல்லது திட்டங்களையோ ஆட்சியா ளர்கள் வகுப்பது இல்லை என்பது வேத னையான உண்மை. நம் கிராமங்களிலும் நகரங்களிலும் அதிக அளவில் இளைஞர் கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். வேலை செய்யும் வயதில் இருக்கும் பத்து இந்தி யர்களில் நான்கு பேருக்கு வருடம் முழுவதும் வேலை கிடைப்பதில்லை. வருடத்திற்கு 30 நாட்கள் வேலையில் இருந்தாலே ஒருவர் வேலை உள்ளவர் என்று முடிவு செய்கிற முறையை மத்திய அரசு ,வேலையின்மை தகவலை வெளியிடும் போது பயன்படுத்துகிறது. இதன் மூலம் வேலையின்மை அளவை குறைத்துக் காட்டு கிறார்கள். உண்மையில் ஒவ்வொரு நாளும் வேலையின்மைப் பிரச்சனை தீவிரமடைகிறது. இந்தியாவில் பெரும்பகுதி வேலை வாய்ப்புகளை உருவாக்கி வந்த விவசா யத்துறை அரசின் கொள்கைகளால் நலிவ டைந்து வருகிறது. தொடர்ந்து நீடித்து வரும் விவசாயப் பிரச்சனைகளால் சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகள் தங்கள் நிலத்தை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட் டுள்ளனர். இதனால் விவசாயத்தை விட்டு பெருமளவிலான ஆட்கள் தொழிற்பிரிவுக்கு இடம்பெயர்கிறார்கள். பெரு நிறுவனங்களுக்கு அதிக வரி குறைப்புச் சலுகைகள், கடன் தள்ளுபடி, ஊக்கத் திட்டங்கள், பொதுச் சொத்துக்கள் மற்றும் இயற்கை வளங்களை தனியா ருக்குத் தாரைவார்ப்பது, தொழிலாளர் நலச் சட்டங்களை பலவீனப்படுத்தி சுரண்டலுக்குத் துணை நிற்பது போன்றவைதான் பொரு ளாதார வளர்ச்சிக்காக அரசு எடுத்த முடிவு கள். இத்தகைய முடிவுகள் பெருநிறு வனங்கள் தங்களது லாபத்தை உயர்த்திக் கொள்ள பயன்படுமே தவிர எந்த வேலை வாய்ப்பையும் உருவாக்காது. மக்களின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யும் பொது முதலீடுகளை ஏற்று நடத்த அரசு மறுப்பது இப்பிரச்சனையை இன்னும் தீவிர மாக்குகிறது. குறிப்பிடத்தக்க அளவிலான நிரந்தரப் பணிகள் தற்போது ஒப்பந்தப் பணிகளாக மாற்றப்பட்டு வருகிறது. உலகின் மிகப்பெரிய துறையான இந்திய ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும் வேலை கள் அதிக அளவில் ஒப்பந்த அடிப்படை யிலும், அவுட்சோர்ஸ் முறையிலும் கொடுக் கப்படுகிறது. பெரிய அளவில் இளைஞர் பட்டாளம் வேலையில்லாமல் இருக்கும் போது ஓய்வுபெற்றவர்களுக்கு மீண்டும் வேலை கொடுப்பது மனசாட்சியற்றச் செயல். இது இளைஞர்களின் வேலை வாய்ப்பை பாதிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங் களான ‘மேக் இன் இந்தியா’, ‘ஸ்கில் இந்தியா’, ‘ஸ்டார்ட் அப் இந்தியா’, ‘டிஜிட்டல் இந்தியா’ போன்றவை வெற்று அறிவிப்புகளே தவிர வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை. மறுபுறம், மோடி அரசு அமல்படுத்திய பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்ற நடவடிக்கை கள் சிறு, குறு தொழில்களை சின்னாபின்ன மாக்கியது. தமிழகத்தில் மட்டும் 50 ஆயி ரம் நிறுவனங்கள் மூடப்பட்டு 5 லட்சம் பேர் வேலையிழந்ததாக தமிழக அரசு சட்டமன்றத்தில் தெரிவித்தது. மோட்டார் வாக னத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை போன்றவற்றில் லட்சக்கணக்கான நபர்கள் வேலை இழப்புக்கு ஆளாகியுள்ளனர். பொதுவாக, சுருங்கி வரும் வேலை வாய்ப்புச் சூழலில் தலித், பழங்குடி மற்றும் சிறுபான்மை இளைஞர்கள் அதீத சோதனை களை சந்திக்கின்றனர். மத்திய, மாநில அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு இடங்கள் பெருமள வில் நிரப்பப்படாமல் உள்ளது. இச்சூழ லில் குறைவான சம்பளத்திலுள்ள தனி யார் வேலைகள் மட்டுமே தலித்துகள், பழங்குடிகள் மற்றும் சிறுபான்மையின ருக்குக் கிடைக்கிறது. தனியார் துறைகளில் இருக்கும் நல்ல வேலைகள் இவர்களுக்கு மறுக்கப்படுகிறது. வேலையின்மையை உருவாக்கியக் கொள்கைகள் சாதிய, மத பாகுபாடுகளையும் உருவாக்குகிறது. தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவல கங்களில் 81 லட்சத்து 30 ஆயிரத்து 25 பேர் பதிவு செய்துள்ளதாக தமிழக அரசின் தொழி லாளர் நலத்துறையின் கொள்கைக் குறிப்பு தெரிவிக்கிறது. ஆனாலும் காலியாகவுள்ள அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் பணி யிடங்களையும் போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட அரசுத் துறை பணியிடங்களையும் முழுமையாக நிரப்புவதற்கு தமிழக அரசு மறுத்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற குரூப்- 4 தேர்வில் 6500 பணியிடங்களுக்கு 14 லட்சம் பேர் தேர்வு எழுதினர். சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசின் தலைமைச் செயலகம், கோவை மாநகராட்சி ஆகிய இடங்களில் துப்புரவு பணியிடங்களுக்கு முனைவர்/ பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள் உள்ளிட்டு ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். இவையனைத்தும் வேலையின்மையின் அவலத்தை தோலு ரித்துக் காட்டுகிறது. அரசின் திட்டங்களை மக்களிடம் எளி தாகக் கொண்டுசெல்லும் வகையில், பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப கூடுதலான எண்ணிக்கையில் புதிய அரசு ஊழியர் பணி யிடங்களை உருவாக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு இருக்கிற அரசுப் பணியிடங்க ளையும் ஒழிக்கும் வகையில் அரசாணை 56-ஐ பிறப்பித்துள்ளது. அரசு வேலை கிடைக்கும் என்ற இளைஞர்களின் நம்பிக்கையை இந்த அரசாணை தகர்த்துள்ளது. பொருளாதார சீர்த்திருத்தம் என்ற பெய ரில் ஆட்சியாளர்கள் அமலாக்கும் தனி யார்மய மற்றும் தாராளமயக் கொள்கை கள்தான் உலகம் முழுவதும் உள்ள வேலை யின்மைக்குக் காரணம். இந்தச் சீரழிவுக் கொள்கைகளுக்கு முடிவு கட்டாமல் வேலை யின்மைப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது. இத்தகைய சூழலில் வேலையின்மைப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வினை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி 5 ஆயிரம் கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொள்வது, பிப்ரவரி 18 அன்று கோட்டை நோக்கி பேரணி நடத்துவது என்றும் மாநில சிறப்பு மாநாடு முடிவு செய்துள்ளது.