கடலூர் வண்டி பாளையத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரிக்கை
கடலூர், மே 24 - கடலூர் வண்டிப்பாளை யம் மகாத்மா காந்தி நகரில் குடிநீர் பிரச்சினை தீர்க்க வேண்டும் என்று கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சிபிஎம் சார்பில் மனு அளித்து வலியுறுத்தப்பட்டது. வண்டிப்பாளையம் மகாத்மா காந்தி நகர் பகுதியில் பல நாட்களாக குடிநீர் வரவில்லை. தண்ணீர் தொட்டியில் இருந்து வெளியேறும் குடிநீர் குழாய் உடைந்து மக்களுக்கு பயன் அளிக்காதவாறு வீணாகிக் கொண்டிருக்கிறது. தண்ணீர் தொட்டி சரியாக பராமரிக்கப்படவில்லை. எனவே, உடனடியாக அதிகாரிகள் தலையிட்டு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சிபிஎம் வண்டிப்பாளையம் கிளை செயலாளர் ஷாகிரா தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து பெண்கள் கோரிக்கை மனு கொடுத்த னர். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் நட வடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இதில் சிபிஎம் மாநகர குழு உறுப்பினர் எஸ்.கே. தேவநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.