tamilnadu

img

மழையால் பாதிக்கப்பட்ட நெசவாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

மழையால் பாதிக்கப்பட்ட நெசவாளர்களுக்கு  ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

திருவண்ணாமலை,ஜூன் 21- மழையால் பாதிக்கப்பட்ட நெசவாளர்க ளுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கைத்தறி நெசவுத் தொழி லாளர் சம்மேளனம் வலி யுறுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வேலூர் சாலையில் தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழி லாளர் சம்மேளனத்தின் மாநில குழு கூட்டம் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் சம்மேளன தலைவர் இ.முத்துக்குமார், பொதுச்செயலாளர் என்.பி. நாகேந்திரன், பொருளாளர் கே .ஜீவா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். திருவண்ணாமலை மாவட்ட பட்டு கைத்தறி தொழி லாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம். வீர பத்திரன், தலைவர் இளங்கோ, பொருளாளர் வி.குமார் ஆகியோர் தீர்மானங்களை விளக்கிப் பேசினர். இந்த கூட்டத்தில், ஜூலை 9 ஆம் தேதி  நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்தில் கைத்தறி நெசவாளர்கள் பங்கேற்பது, தனியார் உற்பத்தியாளர்களிடம் வேலை பார்க்கும் நெச வாளர்களுக்கு போனஸ், வருங்கால வைப்பு நிதி திட்டத்தை தமிழக அரசு சட்டமாக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவது, மழையால் பாதிக்கப்பட்ட நெசவாளர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.