tamilnadu

img

பெண்களுக்கு ‘பிங்க் ஆட்டோ’: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

சென்னை, ஜூன் 22- சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான  விவாதத்தின்போது அமைச்சர் கீதா ஜீவன்  பேசினார். அப்போது அவர் கூறியதாவது: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சென்னை மாநகரத்தில் பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாக அரசு மானியமாக தலா ரூ. 1 லட்சம் வீதம் பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 200 பிங்க் ஆட்டோ (Pink Auto) வழங்கப்படும்.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் நலத் திட்டங்களில் பயன்பெறு வதற்காக வரையறுக்கப்பட்டுள்ள தகுதிகளில் ஒன்றான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.  ரூ. 1,20,000 ஆக உயர்த்தப்படும். கைம் பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள் ஆதரவற்ற பெண்கள்  மற்றும் பேரிளம் பெண்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 200 பயனாளிகளுக்கு சுயதொழில் செய்ய  தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 1 கோடி மானியம் வழங்கப்படும்.

திருவள்ளூர், கோயம்புத்தூர், திருப்பூர், புதுக்  கோட்டை, தூத்துக்குடி, மதுரை ஆகிய 6 மாவட்டங்க ளில் உள்ள 6 அரசு பணிபுரியும் மகளிர் விடுதிகள் ரூ.1 கோடியில் மறுசீரமைக்கப்படும். கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்படும் சிறார்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதற்காக பாதைத் திட்டம் செயல்படுத்தப்படும்.

மதுரை அரசினர் கூர் நோக்கு இல்லத்தில் கூடுதல் துயில் கூடங்கள்  அமைக்கப்படும். சென்னை, திருச்சி, ராமநாதபுரம், மதுரை, திரு வண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இரவல் பெறுவோர்களின் மறுவாழ்வுக்கான இல்லங்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் அமைக்  கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.