tamilnadu

img

ஒத்திவைக்கப்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கு மார்ச் 4 மறைமுக தேர்தல்

சென்னை:
பல்வேறு காரணங்களுக்காக  ஊரகஉள்ளாட்சி அமைப்புகளில் ஒத்திவைக்கப்பட்ட 102 பதவியிடங்களுக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4 ஆம் தேதியன்று நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சிதுணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழுதலைவர், ஒன்றியக் குழு துணைத் தலைவர்,கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கான 102 இடங்களுக்கு பல்வேறு காரணங்களுக்காக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதில் மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சிஒன்றியக் குழு தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கு, மார்ச் 4ஆம் தேதி முற்பகல் 10.30 மணிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் பதவியிடங்களுக்கு மார்ச் 4ஆம் தேதிபிற்பகல் 3 மணிக்கு தேர்தல் நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;