tamilnadu

தென் மாவட்ட பாதிப்புகள்

சென்னை,டிச.27- சென்னை, தென்மாவட்ட பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரி போராட்டம் நடத்தப் படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள அறிக்கை யில், ‘மிக்ஜம்’ புயலால் – பெய்த பெருமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல வட மாவட்டங் களும்; அதன் பின்னர் பெய்த  வரலாறு காணாத பெரு மழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங் கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. பொதுமக்க ளின் இயல்பு வாழ்க்கை  வெகுவாக பாதிக்கப்பட் டுள்ளது. இந்த இயற்கைப் பேரிடரை மாநில அரசு மட்டுமே தன்னந்தனியாக எதிர்கொள்வது இயலாத ஒன்றாகும்.

எனவே, இதனைத் ‘தீவிர  இயற்கைப் பேரிடராக’ அறிவித்தது, தேசிய பேரிடர்  நிவாரண நிதியிலிருந்து இடைக்கால நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.  ஆனால், நிதி வழங்குவ தற்கு மாறாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் பாஜகவின ரும் நிவாரணப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வரும் தமிழ்நாடு அரசைக் குறை சொல்லியும், அவம திக்கும் வகையில் பேசி யும் அவதூறு செய்து வருகின்றனர். எனவே, ஒன்றிய அரசின் கவ னத்தை ஈர்க்கும் நோக்கில்  டிச. 29 அன்று தமிழ்நாடு  முழுவதும் அனைத்து  மாவட்டத் தலைநகரங்களி லும் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று அவர் கூறியுள்ளார்.