tamilnadu

img

10 சட்ட மசோதாக்களை மீண்டும் ஆளுநருக்கே அனுப்பி வைக்க முடிவு

சென்னை, நவ.16- தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப் பட்ட 12 சட்ட மசோதாக்களை நிறுத்தி வைத்திருந்த ஆளுநர் ஆர்.என். ரவி, அவற்றில் 10 மசோ தாக்களை அரசுக்கே திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில், ஆளுந ருக்குப் பதிலடியாக, இந்த 10  மசோதாக்களையும் தற்போ துள்ள நிலையிலேயே 2-ஆவது முறையாக ஆளுநருக்கு அனுப்பி  வைக்கும் வகையில், சனிக்கிழ மையன்று (நவம்பர் 18) சட்டமன்ற  சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியுள் ளது. 

தமிழ்நாடு சட்டமன்றம் நிறை வேற்றிய மசோதாக்களை நிறுத்தி வைத்திருப்பது குறித்து, நவம்பர்  20-ஆம் தேதிக்குள் பதிலளிக்கு மாறு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி  டி.ஒய். சந்திரசூட் கடந்த நவம்பர் 10  அன்று உத்தரவிட்டிருந்தார்.

“தமிழ்நாடு அரசு இங்கே குறிப்பிடும் விஷயங்கள், தீவிர மான மற்றும் கவலைக்குரிய பிரச்ச னைகள். ஆளுநர் ஒரு மசோதா வுக்கு ஒப்புதல் அளிக்கலாம். ஒரு வேளை அது நிதி மசோதாவாக இல்லாமல் இருந்தால் முடிவை நிறுத்தி வைக்கலாம் அல்லது அதில் திருத்தம் மேற்கொள்ளப் பரிந்துரைத்து அரசுக்கு திருப்பி அனுப்பலாம் அல்லது சட்ட மசோ தாவை குடியரசுத் தலைவரின்  ஒப்புதலுக்காக அனுப்பிவைக்க லாம். ஆனால், சட்டப்பேரவை களில் நிறைவேற்றப்படும் மசோ தாக்களை எதுவுமே செய்யாமல் காலவரையின்றி மசோதாக்களை கிடப்பில் போட முடியாது” என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்  கில், கடந்த அக்டோபர் 10 அன்று  உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி  டி.ஒய். சந்திரசூட் காட்டமாக கூறி யிருந்தார்.

எனவே, இதுதொடர்பாக ஆளுநர் மட்டுமன்றி, ஒன்றிய  அரசின் உள்துறை அமைச்சகமும் பதிலளிக்க வேண்டும் என்று கூறி யிருந்த தலைமை நீதிபதி, அன்  றைய நாளில், அட்டர்னி ஜெனரல்  அல்லது சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்  டும் என்றும் ஆணை பிறப்பித்தார்.

இந்தப் பின்னணியிலேயே, தமிழக அரசு தொடர்ந்த வழக்கு  உச்சநீதிமன்றத்தில் நவம்பர் 20 அன்று மீண்டும் விசாரணைக்கு வருவதால் நெருக்கடிக்கு உள்  ளான ஆளுநர் ஆர்.என். ரவி, இது வரை முடிவெடுக்காமல் இழுத்த டித்து வந்த மசோதாக்களில் 10 சட்ட  மசோதாக்களை அவசர அவசர மாக, அரசுக்கே திருப்பி அனுப்பி யுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் கண்  டனங்களுக்குப் பயந்து இவ்வாறு  அவர் திடீரென்று செயல்பட்டுள் ளார். 

ஆளுநர் திருப்பி அனுப்பி யிருக்கும் மசோதாக்கள் பெரும் பாலும் உயர்கல்வி தொடர்பான  மசோதாக்கள் ஆகும். 1. சென்னை  பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா, 2. தமிழ்நாடு டாக்டர்  அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக திருத்த மசோதா, 3. தமிழ்  நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா, 4. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா, 5. தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக திருத்த மசோதா, 6. தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக சட்டத்  திருத்த மசோதா, 7. தமிழ்ப் பல்க லைக்கழக சட்டத் திருத்த மசோதா,  8. தமிழ்நாடு கால்நடை மருத்துவப்  பல்கலைக்கழக மசோதா, 9. அண்ணா பல்கலைக்கழக சட்டத்  திருத்த மசோதா, 10. தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்க லைக்கழகம் அமைப்பதற்கான சட்டத் திருத்த மசோதா ஆகிய வையே ஆளுநரால் திருப்பி  அனுப்பப்பட்டிருக்கும் மசோதாக் கள் ஆகும்.

இப்போதும்கூட ஆளுநர் கை யெழுத்திடத் தயாரில்லை என்றா லும், அவற்றை திருப்பி அனுப்பி வைத்திருப்பதே, தமிழ்நாடு அர சின் சட்ட நடவடிக்கைக்கு கிடைத்த முக்கிய வெற்றியாக அமைந்துள் ளது.

ஏனெனில், சட்ட விதிப்படி ஆளுநர் கையெழுத்திட மறுத்து அனுப்பிய மசோதாவை, மாநில  அரசு மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்வாறு ஒரு மாநில அரசு, சட்ட மசோதாவை இரண்டாவது முறையாக அனுப்பி வைத்தால், நிச்சயமாக ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்தாக வேண்டும். அதற்கான சூழல் தற்போது கிடைத்துள்ளது.

எனவே, ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் அரசுக்கு  வந்த கையோடு, விரைந்து செயல்பட்டு, நவம்பர் 18 அன்று காலை 10 மணிக்கு சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆளுநர்  கையெழுத்திடாமல் அனுப்பி வைத்துள்ள 10 மசோதாக்களை யும், சட்டமன்ற சிறப்புக் கூட்டத்  தொடரில் நிறைவேற்றி மீண்டும்  ஆளுநருக்கே அனுப்பிவைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ள தாக கூறப்படுகிறது. நவம்பர் 20 அன்று வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அதற்கு  முன்னதாகவே இந்த விவகாரத் தில் ஒரு முடிவு காணும் வகை யில் நடவடிக்கைகளை தீவிரப் படுத்தியுள்ளது.