tamilnadu

மணலியில் ரூ.4.75 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்ட தீர்மானம்

மணலியில் ரூ.4.75 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்ட தீர்மானம்

சென்னை,மே 28- மணயிலில் 4.75 கோடி ரூபாய் மதிப் பீட்டில் புதிதாக பேருந்து நிலையமும், கொடுங்கையூர் கால்வாயின் குறுக்கே  காவேரி சாலையில் உள்ள பாலத்தை இடித்துவிட்டு 1.40 கோடி ரூபாய் செல வில் புதிய பாலமும் கட்ட சென்னை மாநகராட்சி மாமன்ற  கூட்டத்தில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  எழும்பூர் கெங்குரெட்டி சுரங்கப் பாதை 1.95 கோடி ரூபாய் செலவிலும், தி.நகர் மெட்லி சுரங்கப்பாலத்தை ரூ.1.46 கோடி மதிப்பீட்டிலும் மேம்படு த்தவும். கோடம்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் சாலையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத் தில் 3.29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டவும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. காலி நிலங்களை முறையாக பராமரிக்காமல் திடக் கழிவுகளோடு வைத்திருந்தால்  அவற்றை மாநகராட்சியே அகற்றி விட்டு அதற்கான கட்டணத்தை வசூ லிக்கும். 5 மெட்ரிக் டன் வரை 5 ஆயிரத்து  800 ரூபாயும், 10 மெட்ரிக் டன் வரை 11 ஆயிரத்து 600 ரூபாயும் வசூலிக்க தீர்மானிக்கப்பட்டது.